வடக்கிலிருந்து படை­களைக் குறைக்கும் விட­யத்தில் முடி­வு­களை எடுப்­பது அர­சாங்­கமா? அல்­லது இரா­ணு­வமா? என்ற விவாதம் இப்­போது எழுந்­தி­ருக்­கி­றது.

வடக்கிலிருந்து முகாம்­களை அகற்­று­வது மற்றும் படை­களைக் குறைப்­பது பற்­றிய விட­யத்தில் தீர்­மா­னத்தை எடுக்கும் பொறுப்பை இரண்டு தரப்­புமே தட்­டிக்­க­ழிக்கத் தொடங்­கி­யுள்­ளமை தான், இந்தக் கேள்வி எழுந்திருப்பதற்குப் பிர­தான கார­ண­மாகும்.

ஆயுத மோதல் முடி­வுக்கு வந்து ஆறு ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரும், வடக்கில் அதி­க­ளவு படை­யினர் நிலை கொண்­டுள்­ளதும், பொது­மக்­களின் நிலங்­களில் படை­மு­காம்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளதும், சர்ச்­சைக்­கு­ரிய விடயங்­க­ளா­கவே இருந்து வரு­கின்­றன.

போரில்­லாத சூழலில், வடக்கிலிருந்து இரா­ணு­வத்தைக் குறைக்க வேண்டும், பொது­மக்­களின் காணிகளிலிருந்து இரா­ணுவம் வெளி­யேற வேண்டும் ஆகிய கோரிக்­கைகள் தமிழ் அர­சியல் கட்­சி­க­ளாலும், சிவில் சமூக அமைப்­பு­க­ளாலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

எனினும், முன்­னைய அர­சாங்கம் இந்த விட­யத்தில் எந்த விட்டுக் கொடுப்­புக்கும் தயா­ராக இல்­லாத, கடும்­போக்கைக் கடைப்­பி­டித்து வந்­தது.

இப்­போ­தைய அர­சாங்கம், இந்த விட­யத்தில் முற்­றி­லு­மாக விட்­டுக்­கொ­டுப்­புடன் நடந்து கொள்ளத் தயா­ராக இல்­லா­விட்­டாலும், கொஞ்­ச­மேனும் நெகிழ்­வுப்­போக்கை கடைப்­பி­டிக்கத் தயா­ராக இருக்­கி­றது.

ஆனாலும், தற்­போ­தைய அர­சியல் சூழல் என்­பது, வடக்கு படை­வி­லக்­கத்தை சர்ச்­சைக்­கு­ரிய ஒன்­றாக மாற்றுவதற்கு ஏற்­ற­தா­கவே காணப்­ப­டு­கி­றது.

Untitled66மஹிந்த ராஜபக்ஷ தரப்பும், எதிர்க்­கட்­சியும், வடக்கிலிருந்து படைகள் விலக்­கப்­ப­டு­வதைக் கடு­மை­யாகச் சாடி வரு­கின்­றன.

அர­சாங்­கத்­துக்கு எதி­ரான நகர்­வுக்கு- இந்த படை­வி­லக்­கத்­தையும் முக்­கி­ய­மா­ன­தொரு மூலோ­பா­ய­மாகக் கையாளத் தொடங்­கி­யி­ருக்­கி­றது மஹிந்த ராஜபக் ஷ தரப்பு.

வடக்கில் முக்­கி­ய­மான படை­மு­காம்கள் விலக்­கப்­ப­டு­கின்­றன, பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யாகி வரு­கி­றது என்று மஹிந்த ராஜபக்ஷ தரப்பு பிர­சாரம் செய்யத் தொடங்­கிய போது, அதனை முறி­ய­டிப்­ப­தற்­காக, யாழ்ப்­பாண படைகளின் தலை­மை­ய­கத்தில் ஒரு செய்­தி­யாளர் சந்­திப்­புக்கு ஏற்­பாடு செய்­தது அர­சாங்கம்.

மேஜர் ஜெனரல் நந்­தன உட­வத்த,

இந்த செய்­தி­யாளர் சந்­திப்பில், யாழ். படை­களின் தள­பதி மேஜர் ஜெனரல் நந்­தன உட­வத்த, படை­வி­லக்கம் தொடர்­பாக தெளி­வான தக­வல்கள் எதையும் வழங்­காமல் மொட்­டை­யாக, 2009ஆம் ஆண்­டுக்குப் பின்னர் 59 இரா­ணுவ முகாம்கள் மூடப்­பட்­ட­தாகக் கூறி­யி­ருந்தார்.

இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மஹிந்த ராஜபக் ஷ, புதிய அர­சாங்கம் 59 இரா­ணுவ முகாம்­களை மூடி­விட்­ட­தாகப் பிர­சாரம் செய்யத் தொடங்­கினார்.

அதன் பின்னர், வடக்கில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையே படை­யி­னரின் 59 புறக்­காவல் நிலைகள் அகற்­றப்­பட்­ட­தாக இரா­ணுவத் தலை­மை­யகம் விளக்கம் கொடுத்­தது.

முக்­கி­ய­மான படை­மு­காம்கள் விலக்­கப்­ப­ட­வில்லை என்றும் விலக்­கப்­பட்­டது புறக்­காவல் நிலைகள் (outposts) மட்டும் தான் என்றும் இரா­ணுவத் தலை­மை­யகம் குறிப்­பிட்­டி­ருந்­தது.

இதி­லி­ருந்து இரா­ணுவ முகாம்கள் விலக்கப்­பட்­டது என்ற செய்தி வெளி­யா­வதை இரா­ணுவத் தலை­மை­ய­கமும், அர­சாங்­கமும் விரும்­ப­வில்லை என்­பது உறு­தி­யா­னது.

புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர்- 2015ஆம் ஆண்டில் எந்­த­வொரு இரா­ணுவ முகாமும் வடக்கில் அகற்றப்­ப­ட­வில்லை என்­பதை, இரா­ணுவத் தலை­மை­யகம் உறுதி செய்த பின்­னரும் கூட, இந்த விவ­கா­ரத்­துக்கு எதிர்க்­கட்­சி­களோ மஹிந்த ராஜபக் ஷ தரப்போ முடிவு கட்­ட­வில்லை.

இதனால், கடந்த வாரம் நாடா­ளு­மன்­றத்தில் மீண்டும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எந்­த­வொரு இரா­ணுவ முகா­மையும் தமது அர­சாங்கம் அகற்­ற­வில்லை என்று கூற வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

அது­மட்­டு­மன்றி, ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்தச் சந்­தர்ப்­பத்தில், வடக்கிலிருந்து படை­மு­காம்­களை அகற்­று­வது தொடர்­பாக அர­சாங்கம் எந்த முடி­வையும் எடுக்­காது என்றும், அதை இரா­ணு­வமே தீர்­மா­னிக்கும் என்றும் குறிப்பிட்­டி­ருந்தார்.

ஆனால், யாழ். படைத் தலை­மை­ய­கத்தில் கடந்த 10ஆம் திகதி நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போது இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜெயநாத் ஜெய­வீர அதற்கு மாறான கருத்தைக் கூறி­யி­ருந்தார்.

“வடக்கில் பாது­காப்பு வல­யங்­களைப் பலப்­ப­டுத்­து­வதும், அகற்­று­வதும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டாகும். நாட்டில் அச்­சு­றுத்தல் நிலை­மைகள் ஏற்­படும் போது பாது­காப்பு வழங்­கு­வதே இரா­ணு­வத்தின் கடமை.

இப்­போது அர­சாங்­கத்தின் அறி­வு­றுத்­தலுக்கமைய பாது­காப்பு பகு­தி­களை அகற்றி பொது­மக்­க­ளுக்கு அவர்­களின் நிலங்­களை வழங்­கு­கிறோம்.

எஞ்­சி­யுள்ள நிலத்­தையும் வழங்கக் கோரி அர­சாங்கம் தெரி­விக்­கு­மானால் அந்த சந்­தர்ப்­பத்தில் நிலை­மை­களை பொறுத்து நாம் நட­வ­டிக்கை எடுப்போம் என்று அவர் கூறி­யி­ருந்தார்.

அதா­வது, வடக்கில் படை­மு­காம்­களை விலக்கும் முடிவு அர­சாங்­கத்தைச் சார்ந்­தது என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆனால், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க வின் கூற்று, அதற்கு மாறாக, படை­வி­லக்கம் இரா­ணுவத் தலைமை எடுக்கும் முடிவு என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

இரண்டு தரப்­புமே, இணைந்து முடி­வெ­டுக்க வேண்­டிய இந்தக் கட்­டத்தில் இரு­த­ரப்­புமே நழுவல் போக்கைக் கடைப்­பி­டித்து வரு­கின்­றன.

படை­வி­லக்கம் என்­பது பாது­காப்பு ஆலோ­ச­னை­களைக் கருத்தில் கொண்டு அர­சியல் ரீதி­யாக எடுக்க்­கப்­பட வேண்­டிய முடி­வாகும்.

உலகில் எந்­த­வொரு இரா­ணு­வமும், தனது கட்­டுப்­பாட்டிலுள்ள எதை­யுமே இழக்க விரும்­பாது. அதுவும், மிகப்பெ­ரிய படையை வைத்­துள்ள இலங்கை இரா­ணு­வத்­துக்கு தேவை­யான ஆள­ணியும், பொரு­ளா­தார வளமும் உள்ள நிலையில், தனது கட்­டுப்­பாட்டுப் பகு­தி­களை சுருக்கிக் கொள்ள வேண்­டிய தேவையோ, அவசியமோ இல்லை.

எனவே படை­வி­லக்கச் சிந்­தனை படைத்­த­ரப்­பிடம் இருந்து தான் வர­வேண்டும் என்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கருத்து அடிப்­ப­டை­யற்­றது.

அதை­விட, பாது­காப்பு ரீதி­யாக படை நிலை­களை மாற்­றி­ய­மைக்கும் தேவை ஒன்று இல்­லாத நிலையில், தற்­போ­துள்ள நிலை­களில் நிரந்­த­ர­மாக தங்­கி­யி­ருப்­ப­தையே படைத்­த­ரப்பு விரும்பும்.

ஆனால் அர­சாங்­கத்­துக்கு அத்­த­கைய நிலை இல்லை. அர­சாங்கம் பொது­மக்­களின் நல­னையும் அவர்­களின் தேவை­க­ளையும் கருத்தில் கொண்டு முடி­வு­களை எடுக்க வேண்­டி­யி­ருக்கும்.

அந்­த­வ­கையில், வடக்கில் படை­யி­னரை விலக்­கு­வது அல்­லது குறைப்­பது பற்­றிய முடி­வு­களை எடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பே­யாகும்.

ஆனால், வடக்கில் முகாம்­களை அகற்­று­வது தொடர்­பாக இரா­ணு­வமே முடிவு எடுக்கும் என்ற ரணில் விக்­கிரமசிங்­கவின் கருத்து, அங்கு இன்­னமும் இரா­ணுவ ஆட்­சியின் நிழல் தான் நில­வு­கி­றது என்­பதை உறுதிப்படுத்தி நிற்­கி­றது.

ஒரு பக்­கத்தில் வடக்கில் இயல்பு நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக கூறும் அர­சாங்கம், இன்­னொரு பக்­கத்தில் இயல்பு நிலையை ஏற்­ப­டுத்­து­வது தொடர்பில் இரா­ணு­வமே முடி­வெ­டுக்க அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறு­வது அபத்­த­மா­னது.

போர்க்­கா­லங்­களில் இரா­ணுவம் முடி­வு­களை எடுப்­பது இயல்பு. ஆனால் போரில்லாச் சூழலில் இரா­ணு­வமே முடி­வு­களை எடுப்­ப­தென்­பது ஜன­நா­யகம் அல்ல.

இது ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும், அவ­­ரது அர­சாங்­கத்­துக்கும் நன்­றா­கவே தெரியும். இத்­த­கைய நிலையை அமெ­ரிக்­காவோ, இந்­தி­யாவோ கூட விரும்­பாது.

இலங்­கையில் நிலை­யான அமைதி, நல்­லி­ணக்கம் ஏற்படுவதற்கு, வடக்கிலிருந்து படைகள் குறைக்­கப்­பட்டு, இரா­ணுவ மய­மற்ற சூழல் உரு­வாக்­கப்­பட வேண்டியது அவ­சியம் என்ற கருத்து, இலங்கை அர­சாங்கம் தவிர்ந்த ஏனைய எல்லாத் தரப்­பி­ன­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டிக்­கி­றது.

எனவே, இரா­ணு­வத்தின் கையிலுள்ள முடி­வெ­டுக்கும் அதி­காரம் அர­சியல் மட்­டத்­துக்கு மாற்­றப்­பட வேண்டும்.

பாது­காப்பு அச்­சு­றுத்தல் ஏற்­படும் போது பாது­காப்பை அளிப்­பது மட்டும் தான் இரா­ணு­வத்தின் வேலை என்றும், படை­யி­னரை வில­கு­மாறு கூறினால், அவர்கள் விலகிக் கொள்­வார்கள் என்றும் பிரி­கே­டியர் ஜெயநாத் ஜெய­வீர கூறி­யி­ருந்தார். அதுதான் யதார்த்­த­மா­னது.

ஆனால், படை­வி­லக்கம் குறித்து முடி­வெ­டுக்கும் அதி­காரம் தன் கையி­லேயே உள்­ள­தென்று காட்­டிக்­கொள்ள அர­சாங்கம் இப்­போது விரும்­ப­வில்லை. அது எதிர்க்­கட்­சி­களின் வசை­மா­ரிக்கு வழி­விடும் என்­பதால் நழுவிக் கொள்­கி­றது.

அதே­வேளை இரா­ணுவத் தரப்பும் இந்த விவ­கா­ரத்தில் தனக்குப் பொறுப்­பில்லை என்று அர­சாங்­கத்தின் தலையில் பொறித்து விட்­டுள்­ளது.

இந்தக் கட்­டத்தில் வடக்கிலுள்ள இரா­ணு­வத்­தி­னரின் பிடியில் உள்ள நிலங் களின் உரிமையாளர்கள் யாரிடம் சென்று இதுதொடர்பாக கேள்வி எழுப்புவது?

அவர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறுப் போவது இராணுவமா? அரசாங்கமா? இராணுவமே முடிவெடுக்கும் – பதிலளிக்க வேண்டும் என்றால், எதற்காக ஒரு அரசாங் கத்தை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்? அது இராணுவ ஆட்சியின் பிரதி விம்பமாக அல்லவா இருக்கும்.

இப்படி ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி யிருக்கிறது ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து.

மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் மீதுள்ள பயத் தின் காரணமாகவோ, அல்லது வடக்கில் இருந்து படைகளை விலக்க விரும்பாமலோ அரசதரப்பு பொறுப்பில் இருந்து நழுவிக் கொள்ளப் பார்க்கிறது.

இத்தகைய நழுவல் போக்கை கடைப்பிடிக் கலாம் என்று ரணில் விக்கிரமசிங்க எண்ணு வாரேயானால் அவர் தமிழர் மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதன் விளைவு வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

-சத்திரியன்-

Share.
Leave A Reply

Exit mobile version