“சேர்ந்தே இருப்பது? – வறுமையும் புலமையும்.” 1965-ம் ஆண்டு வெளியான திருவிளையாடல் படத்தில் சிவாஜியும் நாகேஷூம் பேசும் இந்த வசனத்திற்கும், இந்த வசனத்தைப் பேசிய இரண்டு அற்புதமான கலைஞர்களுக்கும் உலகம் உள்ள வரை அழிவே கிடையாது. அப்படி ஒரு அழிவற்ற கலைஞன்தான் அமெரிக்காவில் வசிக்கும் டொனால்ட்.
51 வயதாகும் டொனால்ட் அமெரிக்க கப்பற்படையில் க்ளாரினெட் வாசிப்பவராக இருந்தவர், எதிர்காலத்தில் பலருக்கு இசையை கற்றுத்தரும் கனவில் இருந்த டொனால்டின் மனைவி 1998-ம் ஆண்டு இறந்துவிட, மனைவியை இழந்த சோகத்தில் போதைப் பொருட்களுக்கு அடிமையானார்.
தனது செயல்கள் மகனை பாதிக்கக்கூடாது என்பதற்காக சமூக சேவைக்காக செயல்படும் ஒரு நிறுவனத்திடம் அவனை ஒப்படைத்தார்.
கடந்த 7 வருடங்களாக வீடில்லாமல் தெருவில் வசிக்கும் டொனால்ட், அவ்வப்போது ப்ளோரிடா வீதியில் இருக்கும் பொதுமக்களுக்கான பியானோவை அடிக்கடி வாசிப்பார்.
வாசிப்பதில் அவருக்கு அதீத ஆர்வம் இருந்தாலும் வயிறு என்றும் ஒன்று இருக்கின்றதல்லவா? அதனால் பியானோவின் மீது தனது தொப்பியை வைத்து பிச்சை எடுப்பார் இந்த விசித்திரக் கலைஞன்.
இந்நிலையில், இது போன்று ஒரு நாள் அவர் வாசிப்பதை, ஒரு பெண் வீடியோவாக எடுத்து யூடியூபில் போட இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.
அவருக்காக பலரும் நிதி திரட்டி கொடுக்கின்றனர். இதனால் Spring Arbor பல்கலைக்கழகத்தில் பண வசதியின்றி பாதியில் நின்று போன தனது படிப்பை மீண்டும் தொடங்கலாம் என்ரு குஷியாக இருக்கிறார் டொனால்ட்.
அவரது இசைத்திறமையைக் காட்டும் வீடியோ: