வல்லாட்சி நாடு என்று வர்ணிக்கப்படுகின்ற அமெரிக்க நாட்டின் சமஷ்டி முறையானது உலகத்தின் முக்கியமான முறையாக கருதப்படுகிறது.
1789 இல் உருவாக்கப்பட்ட இக்கூட்டாட்சி 50 மாநில அரசுகளைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. 50 அரசுகளுக்கும் 50 அதிகார அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நிலப்பரப்பு மக்கள் தொகை என்பவற்றின் அளவுகளையோ, எண்ணிக்கைகளையோ கருத்தில் கொள்ளாமல் எல்லா மாநிலங்களும் சமமாகவே மதிக்கப்படுகின்றன.
மத்திய அரசின் இரண்டாவது சபையென அழைக்கப்படும் செனட் சபையானது எல்லா மாநிலங்களுக்கும் சமமான அங்கத்துவத்தையே வழங்கியுள்ளது.
ஆயுதப்போரின் வளர்ச்சி, இந்திய தலையீடுகள் இலங்கை யாட்சியாளர்களுக்கு பயத்தை உருவாக்கியதன் காரணமாக திம்பு பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார்கள்.
ஆனால், அங்கு முன் வைக்கப்பட்ட நான்கு அம்ச கோரிக்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் நிராகரிக்கப்பட்டது.
1986 ஆம் ஆண்டு நவம்பரில் பெங்களூர் சார்க் உச்சி மாநாட்டின் போது ராஜீவை சந்தித்த ஜே.ஆர். 1984 இல் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டு தீர்மானத்தை முன்வைத்தார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து அம்பாறையை துண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களோடு இணைப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதில் இணக்கம் காணப்பட்ட நிலையில் இந்த தீர்வுப் பொதியை திணிக்க இந்தியப் பிரதமர் முயற்சித்த போதும், கிழக்கு மாகாணத்தை பிரிப்பதை அடிப்படையாக கொண்ட எந்த தீர்வையும் நாம் ஏற்கப்போவதில்லையென விடுதலைப்புலி அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் மறுத்தார்.
தமிழ் மக்களின் சம பலமாக கருதப்பட்ட ஆயுதப்போராட்டத்துக்கு முடிவு கட்டி விட்டோமென இலங்கை அரசாங்கமும் பேரினவாதிகளும் தம்மளவில் கர்வம் கொண்டிருந்த போதும் தமிழ் மக்களின் நீண்ட காலப் போராட்டமானது யுத்தத்துக்குப் பின் புதிய வழியை வகுத்து விட்டது என்பது பேரினவாதிகளும் அதன் பேராளர்களும் அறியாத ஒரு விடயமல்ல.
மூடிக்கொண்ட பாதை மூடிக்கொண்டதாகவே இருந்தாலும் புதிய பாதையில் பயணிக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்குரிய உரிமையென்பதை உள்நாட்டு அரசியல் சமூகமும் வெளிநாட்டு சக்திகளும் ஏற்றுக்கொண்டதாக நடித்தாலும், அதற்கான பரிகாரத்தைக் காண அவர்கள் முயற்சிக்கவில்லை. வழிப்படுத்தவுமில்லை என்பதற்கு பல உதாரணங்களுமுண்டு. காரணங்களும் இருக்கலாம்.
யுத்தத்துக்கு முன் உள்ள நிலைகளைப் போலவே யுத்தத்துக்கு பின்னுள்ள நிலைகளும் இருக்க வேண்டுமென் பதில் கவனம் கொண்டவர்களாக இலங்கையரசாங்கமும் ஆட்சியாளர்களும் இருந்து வருகின்ற சூழ்நிலையில் தான் குற்றவியல் விசாரணையென்ற ஆயுதத்தையும், அரசியல் தீர்வென்ற பரிகாரத்தையும் தமிழ் மக்கள் தேட வேண்டியிருந்தது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வென்ற ஜனநாயகக் குழந்தை பிறந்து தனது 65 ஆவது வயதை தாண்டி விட்ட போதும் அது இன்னும் முழுமை அடையாத குறைப்பிரசவ குழந்தையாகவே உள்ளது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வென்ற விடயத்தை தந்தை செல்வநாயகம் 1951 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் மிகவும் தெளிவாகவும் திடகாத்திரமாகவும் கூறியிருந்தார்.
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமென வும் அவர்கள் அரசியல் ரீதியாக சுயாதீனம் பெறுவதற்கும் சமஷ்டி அமைப்பு முறையின் கீழ் சுதந்திர சமத்துவம், சம உரிமை நீதி எனும் உயர்ந்த ஆட்சியுரிமையை அடைவதற்கும் உரித்துடையவர்கள் என்ற தமிழ் மக்களுக்கான அரசியல் பட்டயத்தை வரைந்து விட்டிருந்தார்.
அப்பட்டயத்தை ஜனநாயக வழியில் பெறுவதற்கு ஆயுதப்போருக்கு முன் போராடினார்கள். ஆயுதப்போருக்குப் பின்னும் அதை வலியுறுத்தும் வகையில் சர்வதேசத்தின் உதவிகளை நாடி நிற்கின்றார்கள்.
முன்னும் சரி பின்னும் சரி ஒன்றுபட்ட நாட்டுக்குள் வலிமை கொண்ட சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை கோரி நிற்கின்றார்கள் என்பது உள்நாட்டு அள விலும் சர்வதேச சமூக அளவிலும் பகிரங்கமாக்கப்பட்ட உண்மை.
அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் த.தே.கூ. அமைப்பின் தலைவர் தமிழ் மக்களுக்கான தீர்வின் தன்மை பற்றி குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
சமஷ்டி முறையிலான அதிகார வலுவுள்ள ஒரு தீர்வை ஒன்றுபட்ட நாட்டுக்குள் கோரி நிற்கின்றோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை அளவு கோலாகக் கொண்டு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அந்த சமஷ்டி முறையிலான தீர்வு பற்றி எமது கனவை நீட்டிப்பார்ப்போம்.
பல தேசிய இனங்கள், குழுக்கள் குழுமங்கள் வாழுகின்ற நாடுகளுக்கு சமஷ்டி ஆட்சி முறை அத்தியாவசியமான தொன்றாகப் பார்க்கப்படுகிறது, சிபாரிசு செய்யப்படுகிறது.
உலக சனத்தொகையில் 40 சதவீதமான மக்களை கொண்டுள்ள சுமார் 28 க்கு மேற்பட்ட நாடுகள் தங்களை சமஷ்டி ஆட்சி கொண்டதாக ஆக்கிக் கொண்டுள்ளனர்.
அதிகளவிலான நிலப்பரப்பு, சனத்தொகையை கொண்டுள்ள நாடுகள் தமக்கு ஏற்ற ஆட்சி முறையாக சமஷ்டியையே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
உலகில் சமஷ்டி ஆட்சி முறைமை யைக் கொண்ட நாடுகளாக ஜேர்மன், இந்தியா, ஈராக், மெக்சிக்கோ, ஆர்ஜென்ரீனா, அவுஸ்திரேலியா, பெலோவ், பொஸ்னியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொங்கோ, மலேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், ரஷ்யா, தென்ஆபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து, சூடான், அமெரிக்கா ஆகிய நாடுகள் காணப்படுகின் றன.
சமஷ்டியானது பல்வேறு வகைகளையும் உள்ளடக்கங்களையும் கொண்டுள்ளது.
01) ஒரு குறிப்பிட்ட சமஷ்டி ஆட்சிக்குள் இரு நிலப்பகுதிகளோ (மாநில அரசு) அல்லது 80 சதவீதத்துக்கும் அதிகமான நிலப்பரப்பு காணப்படலாம்.
02) சில சமஷ்டி முறைமைகள் முழுமையாக மத்திய மயப்படுத்தப்பட்டு சகல அதிகாரங்களும் குவிந்திருக்கின்ற அதேவேளை, பன்முகப்படுத்தப்பட்டதாகவும் இருக்கும்.
03) சில சமஷ்டிகளில் தெளிவாக மத்திய அரசுக்கும் ஏனைய ஆள்புல அரசுகளுக்கும் இடையில் அதிகாரம் பகிரப்பட்டிருக்கும்.
04) சில பிரதம மந்திரியைக் கொண்ட பாராளுமன்றம் அரசு உடையதாக. ஜனாதிபதியையும், காங்கிரஸ் அமைப்பையும் கொண்டிருக்கின் றன.
எனவே, தான் சமஷ்டி ஆட்சி முறை தேவைக்கு ஏற்ப வித்தியாசப்பட்டவையாகவும், சமூக பொருளாதார தொகுப்பின் அடிப்படையிலும் பாரியளவில் வித்தியாசம் கொண்டவை.
ஒரு சமஷ்டி ஆட்சியை உருவாக்குவதற்கு சில பொதுப் பண்புகள் பின்வருமாறு வரையறுக்கப்படும். குறைந்த பட்சம் இரண்டு அரசாங்கங்கள் காணப்பட வேண்டும்.
அவைகளில் ஒன்று முழு நாட்டிற்கும் மற்றையது பிராந்தியங்கள் அல்லது மாகாணங்களுக்காக இருத்தல் வேண்டும். ஒவ்வொன்றும் தனது பிரஜைகளுடன் நேரடி தேர்தல் தொடர்பான உறவுகளைக் கொண்டிருக்கும்.
சமஷ்டி முறையிலான சில நாடுகளை உதாரணத்துக்காக ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் எளிய முறை சமஷ்டி ஆட்சி முறைமையை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் ஆசியாவின் உயர் ஜனநாயகம் கொண்ட நாடாகப் பார்க்கப்படுகின்ற இந்திய நாட்டின் சமஷ்டி முறைமையை சுருக்கமாகப் பார்ப்போம். பல மொழிகளையும் இனங்களையும், மதங்களையும் கொண்ட நாடு.
ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத் உட்பட்ட 18 தேசிய மொழிகளை கொண்டது. 28 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசம் ஒரு தேசிய தலைநகர் பகுதி என்பவை ஆட்சி பாகுபாடு கொண்டவையாக காணப்படுகின்றன. எல்லா மாநிலங்களும் மொழி வழி மாநிலங்களாகும். உதாரணமாக தமிழ் நாடு தமிழ் மொழி வழி மாநிலமாகும்.
மாநிலங்கள் விரும்பினால் தங்கள் சொந்த மொழியை நிர்வாக மொழியாக வைத்திருக்கலாம். அவ்வாறே அநேக மாநிலங்களுண்டு.
பொதுவாக கூறப்போனால் ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களே அதிகமாகவுள்ளன. உத்தராஞ்சல் வனாஞ்சல் தெலுங்கு மிக அண்மையில் உருவாக்கப்பட்ட மாநிலங்களாகும்.
இந்திய (யாப்பு) அரசியல் அமைப்பு கூட்டாட்சி தன்மை கொண்டது. 1950 ஆம் ஆண்டு இது நடைமுறைக்கு வந்தது.
இருந்த போதிலும் நாட்டின் பெயரில் கூட்டாட்சி என்ற பெயர் இடம்பெறவில்லை. அதிகாரப் பங்கீட்டில் மூன்று பட்டியல்கள் உண்டு. (1) மத்தியரசின் பட்டியல், (2) மாநில அரசின் பட்டியல் (3) பொதுப்பட்டியல்.
மத்திய அரசுப் பட்டியலில் பாதுகாப்பு முப்படைகள், வெளிநாட்டு உறவு, வர்த்தகம் நாணய வெளியீடு, வெளியுறவு கொள்கை, போப் பிரகடனம் உட்பட்ட 95 விடயங்கள் அடங்கியுள்ளன.
மாநிலப்பட்டியலில் பொது ஒழுங்கை பாதுகாத்தல்(Police), உள்ளூராட்சி, ஏனைய நீதிமன்றங்கள் என 60 விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
ஐரோப்பிய, ஆசிய கண்டத்தின் நடு சேர் நாடாக கூறப்படுகின்ற ரஷ்யாவின் ஆட்சியலமைப்பும் சமஷ்டி முறை சார்ந்ததாகும்.
1917 ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாடு. 1924 ஆம் ஆண்டு வரையப்பட்ட அரசியல் அமைப்பின்படி நாட்டுக்கு சோவியத் சோஷலிச குடியரசின் ஒன்றியம் என பெயர் சூட்டப்பட்டது.
இதுவே கூட்டாட்சி தன்மையை உருவாக்க காரணமாகியது. தேசிய இனங்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்நாட்டின் சமஷ்டி கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய இனங்களின் நலனைப் பேணும் வகை யில் உருவாக்கப்பட்ட இச்சமஷ்டியில் சிறிய தேசிய இனங்களும் அதிகாரங்களை சுவாசிக்க யாப்பில் வழி செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஆச்சரியப்படக்கூடிய விடயமென்னவென்றால் 185 மொழிகளைப் பேசும் 150 வகை தேசிய இனங்கள் அங்கு வாழ்ந்து கொண்டி ருப்பதாகக் கூறப்படுகிறது.
சிறிய சிறிய இனங்களும் அதிகாரப் பங்கீட்டை பெற வேண்டும் என்ற உயர்ந்த அரசியல் தத்துவத்தின் அடிப்படையில் நான்கு வகையான அதிகார அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
1.தன்னாட்சி குடியரசுகள்
2.தன்னாட்சி பிராந்தியங்கள்
3.தன்னாட்சி தேசிய பகுதிகள்
4.குடியரசு
இப்பிரிப்பின் அடிப்படையில் 16 குடியரசுகள், 20தன்னாட்சி குடியரசு கள், 8 தன்னாட்சி பிராந்தியங்கள், 10 தன்னாட்சி தேசியப்பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சுருக்கமாகக் கூறப் போனால் வெளிநாட்டு தொடர்பு, நாணயத்தொடர்பு, பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம் போர், குடியரசு எல்லை நிர்ணயம் ஆகியவை மத்திய அரசிடமும் ஏனையவை மாநிலங்களுக்குரியவையாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன.
குடியரசு என்ற அலகுக்கு கூடிய அதிகாரமும் ஏனையவற்றுக்கு அவற்றின் தன்மைக்கேற்ப குறைந்தளவிலான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன.
USA
வல்லாட்சி நாடு என்று வர்ணிக்கப்படுகின்ற அமெரிக்க நாட்டின் சமஷ்டி முறையானது உலகத்தின் முக்கியமான முறையாக கருதப்படுகிறது.
1789 இல் உருவாக்கப்பட்ட இக்கூட்டாட்சி 50 மாநில அரசுகளைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. 50 அரசுகளுக்கும் 50 அதிகார அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நிலப்பரப்பு மக்கள் தொகை என்பவற்றின் அளவுகளையோ எண்ணிக்கைகளையோ கருத்தில் கொள்ளாமல் எல்லா மாநிலங்களும் சமமாகவே மதிக்கப்படுகின்றன.
மத்திய அரசின் இரண்டாவது சபையென அழைக்கப்படும் செனட் சபையானது எல்லா மாநிலங்களுக்கும் சமமான அங்கத்துவத்தையே வழங்கியுள்ளது.
அமெரிக்க அரசியல் அமைப்பின் விசேட அம்சம் யாதெனில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிய யாப்பாக காணப்படுவதாகும்.
சில குறிப்பிட்ட அதிகாரங்களே மத்திய அரசின் கைவசம் உள்ளன எஞ்சியவை மாநிலங்களுக்கு பாரதீனப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக சொல்லப்போனால் வெளிநாட்டு வர்த்தகம், உறவுகள், முப்படைகள், நாணய வெளியீடு உட்பட்ட 18 வகையான அதிகாரங்கள் மத்திய அரசுக்குரியவை.
ஐரோப்பாவில் நீதி தேவதை பறந்து திரியும் நாடாக போற்றப்படும் சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி முறை இன்னும் சிறப்பம்சம் கொண்டதாக புகழப்படுகின்றது.
ஜேர்மனியர் 65 சதவீதமும் பிரஞ்சுமொழி பேசுவோர் 18 சதவீதமும், இத்தாலியர் 9 சதவீதமும், ரோமன் மொழி பேசுவோர் 1 சதவீதமும் வாழும் இந்நாட்டில் நான்கு மொழிகளுமே தேசியமொழி. 3 மொழிகள் ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நிர்வாக துறையான சமஷ்டி அவையிலும் மூன்று ஆட்சி மொழிகளைச் சேர்ந் தோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். 1948 உருவாக்கப்பட்ட சமஷ்டி இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த சமஷ்டி கட்டமைப்பில் இருவகை கட்டமைப்புகளுண்டு (1)மாநிலங்கள் (2)கன்ரைன்கள் (CONTONS) 26 கன்ரைன்கள் உள்ள சுவிட்ஸர்லாந்தில் 20 கன்ரைன்கள் முழுமைத்தன்மை கொண்டதாகவும் 06 அரை அதிகாரத் தன்மை கொண்டதாகவும் இயங்கி வருகின்றன.
அமெரிக்காவைப் போல் மத்தியரசுக்கென சில அதிகாரங்களை ஒதுக்கி விட்டு ஏனையவை மாநில அரசுகளின் அதிகாரங்களாக கையளிக்கப்பட்டுள்ளன.
நான்கு நாடுகளின் சமஷ்டி முறையி லான அவற்றின் கட்டமைப்பையும், அதிகார பங்கீட்டையும் சுருக்கமாகப் பார்த்தோம்.
இவ்வகை நாடொன்றிலோ அல்லது பலவற்றின் கலப்பு தன்மை கொண்டதாகவோ சமஷ்டி முறையிலான ஆட்சி அமைப்பே இலங்கை போன்ற நாட்டுக்கு உகந்தது என்ற கோரிக்கைகளும் ஆலோசனைகளும் தமிழர்களால் சுதந்திரத்துக்கு பின்னைய காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன் மொழியப்பட்ட போதும் இலங்கை அரசாங்கமோ, இலங்கை அரசாங்கத்தை நெறிப்படுத்தி வருகின்ற பேரினவாத அரசியல் தலைமைகளோ அல்லது பௌத்தவாத இனக்குழுக்களோ ஏற்றுக்கொள்ளவில்லை.
அங்கீகரிக்க தயாராகவும் இருக்கவுமில்லை. பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – -செல்வா உடன்படிக்கை அதன் பின்னே அடிக்கடி பேசப்பட்டு வந்த பிராந்திய சபைகளோ பேரினவாத தலைமைகள் கடுமையாக எதிர்த்தார்கள்.
மாவட்ட சபைகள் கூட அவர்கள் பார்வையில் நாட்டை பிரிப்பதற்கான பிரிந்து செல்வதற்கான குறியீடாகவே அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்.
ஆயுதப்போரின் வளர்ச்சி, இந்திய தலையீடுகள் இலங்கையாட்சியாளர்களுக்கு பயத்தை உருவாக்கியதன் காரணமாக திம்பு பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார்கள்.
ஆனால், அங்கு முன் வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் நிராகரிக்கப்பட்டது.
1986 ஆம் ஆண்டு நவம்பரில் பெங்களூர் சார்க் உச்சி மாநாட்டின் போது ராஜீவை சந்தித்த ஜே.ஆர். 1984 இல் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டு தீர்மானத்தை முன்வைத்தார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து அம்பாறையை துண்டித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களோடு இணைப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதில் இணக்கம் காணப்பட்ட நிலையில் இந்த தீர்வு பொதியை திணிக்க இந்தியப் பிரதமர் முயற்சித்த போதும் கிழக்கு மாகாணத்தை பிரிப்பதை அடிப்படையாக கொண்ட எந்த தீர்வையும் நாம் ஏற்கப்போவதில்லையென விடுதலைப்புலி அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் மறுத்தார்.
இதன் பின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தீர்வு பொதிகளும் அதை ஐ.தே.கட்சியினரும் ரணில் விக்கிரமசிங்கவின் சமாதான பேச்சு வார்த்தைகளுடன் கூடிய உடன் பாடுகளை சுதந்திரக்கட்சியினரும் மாறி மாறி எதிர்த்ததன் காரணமாக அவற்றுக்கு ஏற்பட்ட அவலங்களை நாட்டு மக்கள் நன்றாக அறிவர்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல் மாகாண சபை மீது இறுதியில் நம்பிக்கை கொள்ள வேண்டிய சூழ்நிலையை மஹிந்த அரசு கொண்டு வந்தது.
அந்த மாகாண சபையை பலவீனப்படுத்தவும், இல்லாது ஒழிக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளும் தெரிந்த விடயங்களே இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் ஆட்சி மாற்றமொன்று நடைபெற்றிருக் கிறது.
இந்த சாத்தியமான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி நிரந்தர அரசியல் தீர்வை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பிரிபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் சுயநிர்ணய உரிமையை அடித்தளமாக கொண்ட சுயாட்சி முறையிலான தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டுமென்ற எத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில்…,
சமஷ்டி முறையிலான தீர்வை நோக்கி நகர்த்தப்பட வேண்டிய இராஜதந்திரங்களையும் சாணக்கியங்களையும் ஜனநாயக யுக்திகளையும் இனியும் மேற்கொள்ள தமிழ் மக்கள் தவறுவார்களாக இருந்தால், தமிழ் தலைமைகள் முன்னெடுக்க மறப்பார்களாக இருந்தால், மீண்டுமொரு ஆயுதப்போருக்கான அத்திவாரம் இடுப வர்களாக அரசும், தமிழ் தலைமைகளும் ஆக வேண்டி வருமென்பது யதார்த்த மாக இருக்கும்.