தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்­முறை நல்­ல­தொரு வெற்­றியை ஈட்டித் தர­வேண்டும். அப்­படித் தரு­வார்­க­ளானால் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை நிச்­சயம் பெற்­றுத்­த­ருவோம்.

எமது இலக்கு 20 ஆச­னங்­க­ளாகும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

ரொறன்­ரோவில் தமிழ்த் ததே­சியக் கூட்­ட­மைப்பு (கனடா) ஒழுங்கு செய்த இரவு விருந்தில் தொலை­பேசி வாயி­லாக பேசும் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

தொடர்ந்து பேசிய சம்­பந்தன்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது அர­சியல் பய­ணத்தை முடிக்க விரும்­பு­கி­றது. எம்மைப் பொறுத்­த­வரை எமது அர­சியல் பய­ணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடி­யாது. அதனை முடிக்க விரும்­பு­கிறோம்.

எதிர்­வரும் 17 இல் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­த­லா­னது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும்.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் 20 ஆச­னங்­களை த.தே.கூ. பெற்­றுக்­கொள்ள வேண்டும். அவ்­வாறு 20 ஆச­னங்­களை பெற்­றுக்­கொள்ளும் போது எங்­களால் வலு­வான நிலையில் இருந்து அர­சாங்­கத்­தோடு பேச­மு­டியும்.

அதற்கு மக்கள் ஆத­ரவு எமக்கு வேண்டும். இந்தத் தேர்தல் மூலம் ஏற்­படும் விளை­வுகள் எதிர்­கா­லத்தில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். எனவே இந்தத் தேர்­தலை எமது அர­சியல் பய­ணத்தில் முக்­கி­ய­மான மைல் கல்­லாக கரு­து­கிறோம்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக, ஒன்­று­பட்ட இலங்­கைக்­குள்ளே எம்மை நாமே ஆளக்­கூ­டிய சமஷ்டி அரசியல் அமைப்பு முறையிலான அரசியல் தீர்வை 2016 ஆம் ஆண்டளவில் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply