இந்திய வரலாற்றில் முதன் முறையாக முதல்வரை வீடு தேடிச் சென்று சந்தித்தார் பிரதமர் ஜெயாவுடன் மதிய விருந்து வியப்பில் அரசியல் வட்டாரங்கள் மூச்சடைத்து போயின தமிழக எதிர்க்கட்சிகள்… ஜெ.க்கு அரசியல் ரீதியில் பலத்தை பெற்றுக்கொடுத்துள்ளது…

இலங்கை தமிழர்கள் தொடர்பில் ஜெ.முன்வைத்த கோரிக்கைகள் இலங்கை அரசியல் சாசனத்தின் 13ஆவது சட்ட பிரிவை அந்நாடு விரைந்து அமுல்படுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

பிர­தமர் நரேந்­திர மோடி, தமி­ழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவை அவ­ரது போயஸ் தோட்ட இல்­லத்தில் நேற்று சந்­தித்தார்.

மத்­திய அரசு சார்பில் ஆண்­டு­தோறும் நடத்­தப்­படும் கைத்­தறி நெச­வா­ளர்கள் விழா முதல் முறை­யாக சென்­னையில் நேற்று நடை­பெற்­றது.

சென்னை சேப்­பாக்­கத்தில் உள்ள சென்னை பல்­க­லைக்­க­ழக நூற்­றாண்டு விழா மண்­ட­பத்தில் நேற்று காலை நடை­பெற்ற இவ் விழாவில் கலந்­து­கொள்­வ­தற்­காக தமி­ழகம் வந்த பிர­தமர் மோடியை சென்னை விமான நிலை­யத்தில் முதல்வர் ஜெய­ல­லிதா பூச்செண்டு வழங்கி வர­வேற்றார்.

08-1439016009-modi-jayalalithaஇதனைத் தொடர்ந்து கைத்­தறி நெச­வா­ளர்கள் விழாவில் கலந்­து­கொண்ட பிர­தமர் மோடி, அதன் பின்னர் மதியம் 1.35 மணி­ய­ளவில் தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தாவின் போயஸ் தோட்ட இல்­லத்­திற்கு சென்றார். அங்கு பொன்­னாடை போர்த்தி பூச்செண்டு வழங்கி முதல்வர் ஜெய­ல­லிதா பிர­தமர் மோடியை வர­வேற்றார்.

மாநில முதல்­வரை விட அதி­காரம் மிக்க பத­வியில் உள்ள பிர­தமர் ஒருவர், புரட்­டோகால் மர­புப்­படி அந்­தஸ்த்தில் குறைந்த மாநில முதல்வர் ஒரு­வரை வீடு தேடி ச்சென்று சந்­திப்­பது இல்லை.

ஆனால் அந்த மரபை உடைத்து பிர­தமர் மோடி, ஜெய­ல­லி­தாவை சந்­தித்­துள்ளார். இது அர­சியல் வட்­டா­ரத்தில் வியப்­பா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

பின்னர் இரு­வ­ருக்கும் இடையே 50 நிமி­டங்கள் வரை பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது.

இந்தச் சந்­திப்­பின்­போது, தமி­ழக அரசு சார்பில் பிர­தமர் மோடி­யிடம் கோரிக்கை மனு ஒன்றை முதல்வர் ஜெய­ல­லிதா அளித்தார். 21 பக்­கங்­களைக் கொண்ட அம் மனுவின் முக்­கிய கோரிக்­கைகளாக,

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்கவேண்டும்.

* முல்லை பெரி­யாறு அணைக்கு மத்­திய தொழில் படையின் பாது­காப்பு வழங்க வேண்டும்.

* தமி­ழக மீனவர் பிரச்­சி­னைக்கு தீர்வு காண கச்­சத்­தீவை திரும்பப் பெற மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

* தேசிய நதிநீர் இணைப்பு திட்­டங்­களை செயற்­ப­டுத்த வேண்டும்.

* காவிரி ஆற்றின் குறுக்கே மேகே­தாட்­டுவில் தடுப்­பணை கட்டும் திட்­டத்தை கர்­நா­டக அரசு கைவிட வலி­யு­றுத்த வேண்டும்.

* நெய்­யாற்றில் இருந்து தமி­ழ­கத்­துக்கு தண்ணீர் திறந்­து­விட கேரள அர­சுக்கு அறி­வு­றுத்த வேண்டும்.

* 4000 மெகாவோட்ஸ் உற்­பத்தி திறன் கொண்ட செய்யூர் அல்ட்ரா மெகா மின் திட்­டத்தை விரைவில் தொடங்க மத்­திய அரசு ஒப்­பந்தப் புள்ளி கோர வேண்டும்.

* சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோ­தாவில் தமி­ழக அரசு ஏற்­க­னவே சுட்­டிக்­காட்­டி­யுள்ள திருத்­தங்­களை மத்­திய அரசு பரி­சீ­லிக்க வேண்டும்.

* தமி­ழ­கத்­துக்­கான மண்­ணெண்ணெய் ஒதுக்­கீட்டை மாதம் ஒன்­றுக்கு 65,140 லீட்­ட­ராக உயர்த்த வேண்டும்.

* தமி­ழ­கத்தில் எய்ம்ஸ் மருத்­து­வ­மனை அமைப்­ப­தற்கு இடம் தேர்வு செய்யும் இறுதிப் பணிகள் இன்­னமும் நடை­பெ­ற­வில்லை. அதை விரைந்து முடிக்க அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

* ஈழத் தமி­ழர்­க­ளுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள இலங்கை அர­சியல் சாச­னத்தின் 13ஆவது சட்ட பிரிவை அந்­நாடு விரைந்து அமுல்­ப­டுத்த மத்­திய அரசு தலை­யிட்டு இலங்­கையை வலி­யு­றுத்த வேண்டும்.

* இலங்­கையில் இறுதிக்கட்ட ப்போரின்­போது இனப்­ப­டு­கொ­லையில் ஈடு­பட்­ட­வர்கள் சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் முன் நிறுத்­தப்­பட மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

* ஜல்­லிக்­கட்டு விளை­யாட்டு மீதான தடையை நீக்க அரசு வழி­வகை செய்ய வேண்டும்.

* சென்னை உயர் நீதி­மன்­றத்தில் தமிழை வழக்­காடு மொழி­யாகப் பயன்­ப­டுத்த ஆவன செய்ய வேண்டும். ஆகிய கோரிக்­கைகள் அந்த மனுவில் இடம் பெற்­றி­ருந்­தன

இந்த சந்­திப்பு அர­சியல் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கி­றது. குறிப்பாக சொத்­துக்­கு­விப்பு வழக்கில் ஜெய­ல­லிதா விடு­விக்­கப்­பட்­டதை எதிர்த்து தொட­ரப்­பட்ட மேன்­மு­றை­யீட்டு மனு உச்ச நீதி­மன்­றத்தில் விசா­ர­ணையில் உள்ள நிலையில், மோடி ஜெய­ல­லி­தாவின் வீடு தேடி சென்று சந்­தித்­தி­ருப்­பது, அர­சியல் வட்­டா­ரத்தில் சல­ச­லப்­பையும், சர்ச்­சை­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதே சமயம் ஜெய­ல­லி­தாவை பொறுத்­த­வரை இந்த சந்­திப்பு அவ­ருக்கு அர­சியல் ரீதியில் பலத்தை பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது.

குறிப்­பாக எதிர்­வரும் தமி­ழக சட்­ட­மன்ற தேர்­தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க.இடையே கூட்­டணி அமைப்­ப­தற்­கான அச்சா­ர­மாக இந்த சந்­திப்பு கரு­தப்­ப­டு­கி­றது.

இச் சந்­திப்­பிற்கு பின்னர் முதல்வர் வீட்டில் பிர­தமர் மதிய உணவு சாப்­பிட்டார். இறு­தியாக பிரத­ம­ருக்கு நினைவுச்சின்னம் வழங்­கியதோடு வாசல்­வரை சென்று பிர­த­மரை முதல்வர் ஜெய­ல­லிதா வழி­ய­னுப்பி வைத்தார்.

Share.
Leave A Reply