ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Wednesday, June 29
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»பிரபா தற்கொலை செய்யவில்லை, மோட்டார் தாக்குதலிலேயே உயிரிழந்தார்: பொன்சேகா
    உள்நாட்டு செய்திகள்

    பிரபா தற்கொலை செய்யவில்லை, மோட்டார் தாக்குதலிலேயே உயிரிழந்தார்: பொன்சேகா

    AdminBy AdminSeptember 1, 2015No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கும் தகவல்களை மறுதலிக்கும் வகையில் இதனை அவர் கூறியுள்ளார்.

    இலங்கைப் படையினர் பிரபாகரனை கொல்லவில்லை எனவும், பிரபாகரனின் மனைவியும் மகளும் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கருணா தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு சரத் பொன்சேகா அளித்துள்ள பேட்டியில் பிரபாகரன் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

    பிரபாகரனின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது எனவும், துப்பாக்கியால் சுட்டிருந்தால் தலையில் எற்படக் கூடிய காயம் வித்தியாசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பிரபாகரன் தலையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது, துப்பாக்கியினால் தனக்கு தானே சுட்டுக் கொண்டிருந்தால் வேறு விதமாக காயம் ஏற்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

    மோட்டார் குண்டு அல்லது எறிகணையின் பகுதி பிரபாகரனின் தலையில் பட்டு இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் இறந்த பின்னர் அவரது உடல் பிரேதப் பிரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    காவல்துறையினர் சட்டங்களின் அடிப்படையில் பிரதேப் பரிசோதனை நடத்தி, மரபணு பரிசோதனையும் நடத்தியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மனைவி மகள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது பற்றி தம்மிடம் விபரங்கள் எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றியும் தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த களத்தில் காணப்பட்ட அனைத்து சடலங்களும் அடையாளம் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பிரபாகரனின் மூத்த புதல்வர் சார்ள்ஸ் அன்ரனியின் சடலத்தை தேடியதாகவும் அதனைக் கண்டு பிடித்து அடையாளம் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இறுதிக் கட்ட யுத்தின் இறுதி நாட்களில் குமரன் பத்மநாதன், செய்மதி தொலைபேசி ஊடாக பிரபாகரனுடன் தொடர்புகளைப் பேணி வந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடுமையான போராட்டமொன்றின் போது ஒரு நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பதனை மிக உறுதிபடக் கூறுவது சாத்தியபடாது எனவும், யுதத்தில் பங்கேற்றவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இதனைச் செய்வது சிரமமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நந்திக்கடல் பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரனைச் சுற்றியிருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    Post Views: 595

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    புகையிரத கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

    June 28, 2022

    யாழில் காணாமல் போன சிறுமி கிளிநொச்சியில் மீட்பு

    June 28, 2022

    எரிபொருள் பெற்றவர்கள் கடமைக்கு செல்ல வேண்டும்

    June 27, 2022

    Leave A Reply Cancel Reply

    September 2015
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?

    June 29, 2022

    பொய் பொய் பொய்

    June 29, 2022

    சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக பைடன் அறிவிப்பு

    June 28, 2022

    இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு

    June 28, 2022

    இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

    June 28, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?
    • பொய் பொய் பொய்
    • சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக பைடன் அறிவிப்பு
    • இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version