டெல்லி செங்­கோட்­டையில் அமைக்­கப்­பட்ட சிறப்பு நீதி­மன்­றத்தில், காந்தி கொலை வழக்கு விசா­ரணை நடந்­தது. 1948 நவம்பர் 8ஆம் திகதி கோட்சே வாக்­கு­மூலம் கொடுத்தார்.

வாக்­கு­மூலம், ஆங்­கி­லத்தில் மொத்தம் 92 பக்­கங்­களில் எழு­தப்­பட்­டி­ருந்­தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்­கு­மூ­லத்தை கோட்சே படித்தார்.

வாக்­கு­மூ­லத்தில் கோட்சே கூறி­யி­ருந்­த­தா­வது:-

காந்­தியின் கொள்­கையால் ஈர்க்­கப்­பட்டு நாட்­டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று அவரின் கால்­க­ளுக்கு செருப்­பாக இருக்க ஆசை பட்டு அவ­ருடன் சேர்ந்தேன்.

“தெய்வ பக்­தி­யுள்ள பிரா­மணக் குடும்­பத்தில் நான் பிறந்தேன். இந்­து­வாகப் பிறந்­ததில் பெரு­மைப்­ப­டு­கிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்­றுதல் ஏற்­பட்­டது.

ஆனால், எனக்கு எவ்­வித மூட நம்­பிக்­கையும் ஏற்­ப­ட­வில்லை. தீண்­டாமை ஒழி­யவும், சாதி ஒழி­யவும் பாடு­பட்டேன். எல்லா இந்­துக்­க­ளையும் சம­மாக நடத்த வேண்டும்,

அவர்­க­ளுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்­பிக்கக் கூடாது என்று வற்­பு­றுத்தி வந்­துள்ளேன். சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்­ரோஜி போன்றோர் எழு­திய நூல்­களை நிறை­யவே படித்­தி­ருக்­கிறேன்.

1946இல் முக­ம­தி­யர்­களின் கொடுமை சொல்­லொ­ணாத துய­ரத்தைத் தந்­தது. அர­சாங்­கத்தின் ஆத­ரவும் அவர்களுக்கு இருந்­தது.

நவ­கா­ளியில் நடந்த நிகழ்ச்­சிகள் எங்கள் ரத்­தத்தைக் கொதிப்­ப­டையச் செய்­தன. அத்­த­கைய கொடு­மைகள் புரிந்த முஸ்­லிம்­களை மகாத்மா காந்தி ஆத­ரித்தார்.

அது­மட்­டு­மல்ல ெடில்­லியில் ஒரு இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்­தனைக் கூட்­டத்தில் “குர்ஆன்” வாசகங்களைப் படிக்கச் செய்தார்.

Gandhi-Godse(C)Gandhi-Godse

முஸ்­லிம்கள் தொழுகை நடத்தும் மசூ­தியில் பகவத் கீதையை மகாத்மா காந்­தியால் படிக்க முடி­யுமா?

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி விளக்­குகள் அலங்­கா­ரத்­துடன் நாடெங்கும் சுதந்­திர தினம் கொண்­டா­டப்­பட்ட அதே நாளில் பஞ்­சாபில் இந்­துக்­களின் உடை­மை­களை முஸ்­லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள். இந்­துக்­களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்­தோ­டி­யது.

மேற்கு பாகிஸ்­தானில் இருந்த சிறு­பான்மை இந்­துக்கள் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டனர். அதே­போல கிழக்குப் பாகிஸ்­தானில் இருந்த முக­ம­தி­யர்­களும் நடந்து கொண்­டனர். 11 கோடி மக்கள் வீடு­களை இழந்­தனர்.

இவ்­வ­ளவு நடந்தும் மகாத்மா காந்தி, “முக­ம­தி­யர்­களின் செயலில் ஒரு களங்­க­மு­மில்லை” என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்­தது. இனிமேல் நான் பொறு­மை­யாக இருக்க முடி­யாத சூழ்­நிலை உரு­வா­னது.

காந்­தி­ய­டி­களை கடு­மை­யான வார்த்­தை­களால் நான் தாக்க விரும்­ப­வில்லை. அவ­ரு­டைய கொள்­கையும், மார்ககத்­தையும் முழு­வ­தாக நிரா­க­ரிப்­ப­தாகச் சொல்ல விரும்­ப­வில்லை.

பிரிட்­டிஷ்­கா­ரர்கள், நம்­மி­டையே பிரி­வி­னையை உண்­டாக்கி, சுக­மாக நம் நாட்டை ஆண்டு வந்­த­போது, மகாத்மா காந்தி அதை எதிர்த்துப் போராடி பெரும் வெற்­றியை நமக்குத் தந்­தவர் என்­பதை நான் மறுக்­க­வில்லை அதற்­காக அவரைப் பாராட்­டு­கிறேன்.

ஆனால், இந்­தியா பிரிக்­கப்­ப­டு­வ­தற்குக் கார­ண­மா­கவும், துணை­யா­கவும் இருந்­தவர் அவர். அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்­தி­யா­விற்குத் துன்­பமும், இழப்பும் ஏற்­படும். முஸ்­லிம்­களின் ஆதிக்­கத்­திற்கும், அட்­டூ­ழி­யத்­திற்கும் பக்­க­ப­ல­மாக இருப்பார் என்­பதை உணர்ந்து கொண்டேன்.

நல்­லதோ, கெட்­டதோ அவர் எடுக்கும் முடி­வி­னையே இந்­தியா ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற பிடி­வாதம் அவ­ரிடம் காணப்­பட்­டது.

இந்­தியா அவ­ரு­டைய தலை­மையை நாடினால் அது நம் நாட்டை எங்­கேயோ கொண்­டுபோய்ச் சேர்த்­து­விடும். அவரே இங்கு உள்ள எல்­லா­வற்­றையும் இயக்­கு­பவர்; ஒரு நீதி­பதி என்றும் கூறலாம்.

“சத்­தி­யாக்­கி­ரகம்” என்றும் அழி­யாது என்­பது அவர் அறிந்த சூத்­திரம். காந்­தி­ஜியே தன் செயல்­க­ளுக்குத் தாமே வழக்­க­றி­ஞரும், நீதி­ப­தியும் எனலாம். அவ­ரது அர­சியல், பகுத்­த­றிவு இல்­லா­தது எனப் பெரும்­பா­லானோர் நினைத்­தனர்.

ஜின்­னாவின் இரும்­புப்­பிடி, என் உள்­ளத்தின் முன் காந்­தி­ஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடி­யா­கி­விட்­டன.

ஜின்­னா­விடம் தம் கொள்கை ஒருக்­காலும் வெற்றி பெறாது என்று தெரிந்­தி­ருந்தும் அவர் கொள்­கையை மாற்றிக் கொள்­ளா­ம­லேயே இருந்தார்

தம் தோல்­வி­யையும் அவர் ஒப்­புக்­கொள்­ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்­னா­வுடன் பேசி அவரை முறியடிக்­கவும் வழி­வி­ட­வில்லை.

இம­ய­மலைப் போன்ற பெரிய தவ­று­களைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்­டாக்­கி­ய­வரைத் “தெய்வம்” என மற்­றவர் மதித்­தாலும் என் உள்ளம் ஏனோ அவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள மறுக்­கி­றது, அவர் மீது கோபம்தான் வரு­கி­றது.

காந்­தியைக் கொன்றால் என் உயிரும் போய்­விடும் என்­பதை அறிவேன். சிறிதும் சந்­தேகம் இல்­லாமல் என் எதிர்­காலம் பாழாய்ப்­போ­வது உறுதி.

பாகிஸ்­தானின் ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்தும் அட்­டூ­ழி­யத்­தி­லி­ருந்தும் இந்­தியா விடு­த­லை­ய­டையும் என்­பது என்­னவோ உறு­தி­யாகும். மக்கள் என்னை “முட்டாள்” என்று அழைக்­கலாம்.

அறி­வில்­லாமல் அண்ணல் காந்­தி­ய­டி­களைக் கொன்­ற­தாகக் கூறலாம். நம் இந்­தியா ஒரு பல­முள்ள நாடா­கவும், சுதந்­திர நாடா­கவும் இருக்­க­வேண்டும் என்­பதே என் விருப்பம்.

நம் நாடு வல்­ல­ர­சாகத் திக­ழ­வேண்­டு­மானால், காந்­தி­ய­டி­களின் கொள்­கையை நாம் கைவி­ட­வேண்டும். அவர் உயி­ரோ­டி­ருந்தால் நாம் அவர் கொள்­கை­க­ளி­லி­ருந்து மாறு­பட்டுச் செயற்­பட முடி­யாது.

நான் இந்த விஷ­யத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால், நான் அது­பற்றி யாரி­டமும் பேச­வில்லை. எந்த வகை­யான யோச­னை­யையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளி­கையில் பிரார்த்­தனை மைதா­னத்தில் 30.1.1948இல் மகாத்மா காந்­தியைச் சுட என் இரு கைக­ளுக்கும் வலி­மையை நான் வர­வ­ழைத்­துக்­கொண்டேன்.

இனி நான் எதையும் சொல்­வ­தற்­கில்லை. நாட்டின் நல­னிற்­காகத் தியாகம் செய்­வது பாவம் எனக் கரு­தினால் நான் பாவம் செய்­த­வ­னாவேன். அது கௌரவம் என்றால் அந்த கௌரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடு­தலைப் போரில், வன்­மு­றையை ஆத­ரிப்­ப­வர்­களை மட்டும் காந்­திஜி எதிர்த்தார் என்­ப­தில்லை. அவ­ரு­டைய அர­சியல் கருத்­துக்கு எதி­ரான கருத்­துக்கள் உடை­ய­வர்­க­ளையும் வெறுத்தார்.

அவ­ரு­டைய கொள்­கை­களை ஏற்­றுக்­கொள்­ளா­த­வர்கள் மீது அவ­ருக்கு இருந்த வெறுப்­புக்கு சுபாஷ் சந்­தி­ரபோஸ் ஓர் எடுத்­துக்­காட்டு. காங்­கி­ரஸில் இருந்து சுபாஷ் சந்­தி­ரபோஸ் தூக்கி எறி­யப்­படும் வரை, காந்­தி­ஜியின் வன்மம் முற்­றிலும் அக­ல­வில்லை.

f-17-1சுபாஷ் சந்­தி­ரபோஸ் 6 ஆண்­டுகள் நாடு கடத்­தப்­ப­ட­வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்­த­ர­விட்­டதை எதிர்த்து எனக்குத் தெரிந்­த­வரை காந்­திஜி ஒரு வார்த்­தை­கூட சொல்­ல­வில்லை.

மற்ற எந்த தலை­வர்­க­ளையும் விட நேதா­ஜியை மக்கள் விரும்­பினர். 1945இல் ஜப்­பா­னியர் தோல்­விக்­குப்­பி­றகு சுபாஷ் சந்­தி­ரபோஸ் இந்­தி­யா­வுக்குள் நுழைந்­தி­ருந்தால், இந்­திய மக்கள் ஒட்­டு­மொத்­த­மாக அவரை வர­வேற்று இருப்­பார்கள். ஆனால் காந்­தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்­தி­ரபோஸ் இந்­தி­யா­வுக்கு வெளியில் இறந்­து­விட்டார்.

முஸ்­லிம்கள் மீது காந்­திஜி அதி­க­மான மோகத்தை வளர்த்­துக்­கொண்டார். பாகிஸ்­தானில் இருந்து இந்தியாவுக்கு அக­தி­க­ளாக ஓடி­வந்த இந்­துக்கள் மீது இரக்­கப்­பட்டு ஆறு­த­லாக ஒரு வார்த்­தை­கூட பேச­வில்லை.

மனி­தா­பி­மானம் பற்றி அவ­ருக்கு ஒரு கண்தான் இருந்­தது. அது முஸ்லிம் மனி­தா­பி­மானம். காந்­தி­ஜிக்கும், எனக்கும் இடையே தனிப்­பட்ட முறையில் எவ்­வித பகையும் இருந்­தது இல்லை.

காந்­திஜி மீது நான் இந்த தீவிர நட­வ­டிக்­கையை மேற்­கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்­டி­ருந்த பக்­தி­தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

பாகிஸ்தான் நிறு­வப்­பட்ட பிற­கா­வது, பாகிஸ்­தானில் வாழும் இந்­துக்­களின் நல­னைக்­காக்க இந்த காந்­தீய அரசாங்கம் ஏதா­வது நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால், என் மனதைக் கட்­டுப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்க முடியும்.

ஆனால், விடியும் ஒவ்­வொரு நாளும் ஆயி­ரக்­க­ணக்­கான இந்­துக்கள் படு­கொலை செய்­யப்­பட்ட செய்­தியைக் கொண்டு வந்­தது.

godse killing gandhi

15 ஆயிரம் சீக்­கி­யர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர். நூற்­றுக்­க­ணக்­கான பெண்கள் நிர்­வா­ண­மாக்­கப்­பட்டு ஊர்­வ­ல­மாகக் கொண்டு செல்­லப்­பட்­டனர். அந்த இந்­துப்­பெண்கள் சந்­தை­களில் ஆடு, ­மா­டுகள் விற்­கப்­ப­டு­வ­து­போல விற்­கப்­பட்­டனர்.

இதனால் இந்­துக்கள் தங்கள் உயிரைக் காப்­பாற்றிக் கொள்ள இந்­தி­யாவை நோக்கி ஓடி­வந்­தனர். இந்­தி­யாவை நோக்கி வந்த இந்­திய அக­திகள் கூட்டம், நாற்­பது மைல் நீளத்­துக்கு இருந்­தது.

இந்தக் கொடிய நிகழ்ச்­சிக்கு எதி­ராக இந்­திய அரசு என்ன நட­வ­டிக்கை எடுத்­தது? அவர்­க­ளுக்கு விமா­னத்தில் இருந்து ரொட்டித் துண்­டுகள் போடப்­பட்­டன.

அவ்­வ­ள­வுதான். “தேசத்­தந்தை” என்று காந்தி அழைக்­கப்­ப­டு­கிறார். அது உண்­மை­யானால் அவர் ஒரு தந்­தைக்­கு­ரிய கட­மை­யி­லி­ருந்து தவ­றி­விட்டார். பிரி­வி­னைக்கு (பாகிஸ்தான் அமைப்­புக்கு) சம்­மதம் தெரி­வித்­ததன் மூலம் இந்த தேசத்­துக்கு நம்­பிக்கைத் துரோகம் செய்­து­விட்டார்.

பிரி­வி­னைக்கு காந்­திஜி சம்­ம­தித்­ததால் அவர் இந்­தி­யாவின் தேசத்­தந்தை அல்ல; பாகிஸ்­தானின் தேசத்­தந்தை என்று நிரூ­பித்து விட்டார்.

பாகிஸ்தான் பிரி­வி­னைக்கு நாம் இணங்­கி­யி­ருக்­கா­விட்டால், நமக்கு சுதந்­திரம் கிடைத்­தி­ருக்­காது என்று சிலர் கூறு­வது தவ­றான கருத்து. தலை­வர்கள் எடுத்த தவ­றான முடி­வுக்கு அது வெறும் சாக்­குப்­போக்­கா­கவே எனக்குத் தோன்­று­கி­றது.

1947 ஆகஸ்ட் 1௫ஆம் திகதி பாகிஸ்தான் சுதந்­திர நாடா­னது எப்­படி? பஞ்சாப், வங்­காளம், வட­மேற்கு எல்லை மாகாணம், சிந்து முத­லிய பகுதி மக்­களின் உணர்­வு­க­ளுக்கும், கருத்­துக்­க­ளுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

பிரிக்­கக்­கூ­டாத பாரதம் இரண்­டாகப் பிரிக்­கப்­பட்டு, அதன் ஒரு பகு­தியில் மத­வாத அரசு நிறு­வப்­பட்­டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்­க­ளுக்கு வெற்­றிக்­க­னியை பாகிஸ்தான் வடிவில் பெற்­றனர். பட்­டப்­ப­கலில் சுமார் 400 பேர் கூடி­யி­ருந்த கூட்­டத்தில் காந்­தி­ஜியை நான் சுட்டேன். அது உண்மை.

சுட்ட பிறகு ஓடு­வ­தற்கு நான் முயற்சி செய்­ய­வில்லை. தப்பி ஓடும் எண்­ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்­கொண்டு தற்­கொலை செய்து கொள்­ளவும் முய­ல­வில்லை.

204

கொலை பற்றி நீதி­மன்­றத்தில் என் உணர்ச்­சி­களைக் கொட்டித் தீர்க்­கவே விரும்­பினேன். மரி­யா­தைக்­கு­ரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்­ட­னை­யையும் விதிக்­கு­மாறு கட்­ட­ளை­யி­டலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்­க­வில்லை.

பிறர் என் சார்­பாக கருணை வேண்­டு­வ­தையும் நான் விரும்­ப­வில்லை. “கொலைக்கு நானே பொறுப்பு” என்னோடு பலர் குற்றம் சாட்­டப்­பட்டு இருக்­கி­றார்கள்.

கொலைக்கு சதி செய்­த­தாக அவர்கள் மீது குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. நான் முன்பே கூறி­ய­படி என் செய­லுக்கு கூட்­டா­ளிகள் யாரும் கிடை­யாது. என் செய­லுக்கு நானே முழுப்­பொ­றுப்பு.

அவர்­களை என்­னோடு குற்றம் சாட்டி இருக்­கா­விட்டால் எனக்­காக எந்த எதிர்­வா­தமும் செய்­தி­ருக்­க­மாட்டேன். வீர­ச­வர்க்­காரின் தூண்­டு­தலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17ஆம் திகதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் “வெற்றியோடு திரும்புங்கள்” என்றும் வாழ்த்தி வழியனுப் பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன்.

இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன்.

இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு “இந்துஸ்தான்” என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும்.

இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” இவ்வாறு கோட்சே கூறினார்…..

Share.
Leave A Reply