ilakkiyainfo

73 வயது மாமியை துஷ்­பி­ர­யோகம் செய்த மரு­மகன் கைது!

வல்லுறவுப்  போட்டியில்  இந்தியாவை  வெல்லப் போகிறதா இலங்கை? என்ன நடக்கிறது  நாட்டில்..?

தனது மாமியை வல்­லு­ற­வுக்குட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் மரு­மகன் ஒரு­வரைக் கைது செய்­தி­ருப்­ப­தாக கொஸ்­வத்தைப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

73 வய­து­டைய தனது மாமியை இவ்­வாறு வல்­லு­ற­வுக்குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் லுணு­வில, வெரெல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த 52 வய­து­டைய நபர் ஒரு­வரே பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்த வயோ­திபப் பெண் கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபரின் மனை­வியின் தாய் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தனது பிள்­ளைகள் திரு­ம­ண­மான பின்னர் குறித்த வயோ­திபப் பெண் லுணு­வில, ரஜ­வத்தை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள வீடொன்றில் தனி­மையில் வசித்து வந்­துள்ளார்.

இந்­நி­லையில் சம்­பவ தினம் இரவு 11 மணி­ய­ளவில் தனது வீட்­டுக்கு வந்த சந்­தேக நப­ரான மரு­மகன் தன்னை பல­வந்­த­மாக வல்­லு­ற­வுக்குட்­ப­டுத்­தி­ய­தாக குறித்த வயோ­திபப் பெண் சம்­பவம் தொடர்பில் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

எனினும் தான் அவ்­வா­றான எந்தத் தவ­றையும் செய்­ய­வில்லை என சந்­தேக நப­ரான மரு­மகன் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

வல்­லு­ற­வுக்குட்­ப­டுத்­தப்­பட்ட வயோ­திபப் பெண்ணை வைத்­திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹம்பாந்தோட்டையில் சிறுமியைக் கடத்த முயற்சி ; விழித்து அலறியதனையடுத்து தப்பிச் சென்ற நபர்!

12229surrand
ஹம்­பாந்­தோட்டை, புந்­தல பிர­தே­சத்தில் இரவு வேளையில் வீடு புகுந்து சிறுமி ஒரு­வரை கடத்திச் செல்ல முற்­பட்ட நபர் ஒரு­வரைத் தேடி பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

நேற்று அதி­காலை 1.30 மணி­ய­ளவில் இந்த கடத்தல் முயற்சி இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் 119 பொலிஸ் அவ­சர தொலை­பேசி இலக்கம் ஊடாக ஹம்­பாந்­தோட்டை பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வலின் அடிப்­ப­டையில் விசார­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் தெரி­வித்­தது.

சம்ப்வம் தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது, ஹம்­பாந்­தோட்டை, புந்­தல பிர­தே­சத்தில் உள்ள வீடொன்றில் தனது அறையில் உறங்­கிக்­கொன்­டி­ருந்த 13 வய­த­தான சிறுமி திடீ­ரென விழித்­துக்­கொன்ட போது அடை­யாளம் தெரி­யாத நபர் ஒரு­வரைக் கண்டு சப்­த­மிட்­டுள்ளார்.

சிரு­மியின் சப்­தத்­தை­ய­டுத்து உறக்­கத்­தி­லி­ருந்து விழித்­துக்­கொன்­டுள்ள ஏனைய குடும்ப உறுப்­பி­னர்கள் அடை­யாளம் தெரி­யாத நபர் ஒரு­வரைக் கண்­டுள்­ள­துடன் அவரைப் பிடிப்­ப­தற்கு முயற்­சித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து நபர் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்ளார் பின்னர் இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறிவிக்கப்பட்டுள்­ளது.

இத­னை­ய­டுத்து ஸ்தலத்­துக்கு விரைந்த ஹம்­பாந்­தோட்டை பொலிஸார் சந்­தேக நபரைத் தேடி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

சிறு­மியைக் கடத்­து­வ­தற்கு அல்­லது துஷ்­பி­ர­யோகம் செய்­வ­தற்கு சந்­தேக நபர் வந்­தி­ருக்­கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சந்­தேக நப­ரி­னு­டை­யது என கரு­தப்­படும் ஒரு சோடி பாத­ணியை வீட்­டுக்கு அரு­கி­லி­ருந்து கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

குறித்த பாத­ணியை மையப்­ப­டுத்தி விசேட விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட் டுள்ளதாகவும் திஸ்ஸ மஹராம மற்றும் ஹம்பாந்தோட்டை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.

Exit mobile version