டெல்லியில் மது போதையில் இளம்பெண் ஒருவர் ஆபாசமாக பேசி ஆண்களிடம் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கன்னாட் பகுதியில் நேற்றிரவு, இளம்பெண் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார், இதனால் கோபமடைந்த இளைஞர் இளம்பெண்ணின் காரை நிறுத்தி ஏன் இடித்தீர்கள் என்று கேட்டுள்ளார்.
ஆனால் அந்த பெண் போதையில் இருந்ததால், குறித்த இளைஞரையும் சுற்றி இருந்த நபர்களையும் ஆபாசமாக பேசியதுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
மூன்று மணிநேரமாக நடந்த இந்த தகராறு அடங்கிய காட்சிகள் வீடியோவாக தற்போது சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
100 வீடுகளை உடைத்தது: சிலிகுரியை துவம்சம் செய்த யானை (வீடியோ )
மேற்கு வங்கம் சிலிகுரியில் காட்டு யானை ஒன்று புகுந்து நகரையே துவம்சம் செய்தது. இரு சக்கர வாகனங்கள், கார்கள், வீடுகளை அடித்து நொறுக்கிய அந்த யானையை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறினர்.
கையறு நிலையை அடைந்த மக்கள் தலை தெறிக்க ஓடினர். கிட்டத்தட்ட 100 வீடுகளை உடைத்து அந்த யானை சேதப்படுத்தியது. சிலிகுரியை மிரள வைத்த இந்த சம்பவத்தில் பொதுமக்கள் அதிர்டவசமாக உயிர் தப்பினர்.