அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பத்து வயது சிறுவன் ஒருவன் எழுதிய நெகிழ வைக்கும் கடிதத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் வசித்துவருபவர் 22 வயதான Tylor Sloan, இவர் ஆக்லாண்டு பகுதியில் நடைபெற்ற மோட்டார் விழாவுக்கு சென்றுள்ளார்.
சம்பவத்தன்று இவரது பணப்பையுடன் அடையாள அட்டைகளும் தொலைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது நடந்த 3-வது நாள் இவரது தாயாரின் முகவரிக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் தமது மகளின் பெயர் குறிப்பிட்டிருந்ததால் அவர் தமது மகளை அழைத்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த கடிதத்தை பிரித்து பார்த்த ஸ்லோவனுக்கு வியப்புடன், தொலைந்த அடையாள அட்டையும் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அந்த கடிதத்தில் தமது பெயர் நசீம் லாரன்ஸ் எனவும் தமக்கு 10 வயது ஆவதாகவும் குறிப்பிட்டிருக்கும் அந்த சிறுவன்,
தமக்கு கிடைக்கப்பெற்ற அந்த பணப்பையை மோட்டோர் விழா நிகழ்வு பகுதியில் இருந்து கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொருட்கள் தொலைந்துபோனால் எப்படி நாம் அதை உணர்வோம் என்பது தம்மால் புரிந்துகொள்ள முடியும் எனவும் அந்த கடிதத்தில் சிறுவன் குறிப்பிட்டிருந்தான்.
இந்த கடிதம் கிடைத்ததும் உங்கள் முகத்தில் புன்னகையையும் மகிழ்ச்சியையும் நான் ஏற்படுத்தியிருக்கிறேன் என நம்புவதாக அந்த சிறுவன் தெரிவித்திருந்தான்.
இந்த கடிதத்தை தமது நண்பரும் அந்த பகுதியில் செயல்பட்டுவரும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் தெரிவிக்க, அவர் அதை அங்கு பகிர்ந்துகொண்டுள்ளார்.
மேலும் தமது அடையாள அட்டை மற்றும் 40 டொலர் பணத்தை திருப்பி அனுப்பிய அந்த சிறுவனுக்கு வெகுமதியாக 20 டொலர் பணத்தையும் நன்றி கடிதமும் இனிப்பும் அனுப்ப இருப்பதாக ஸ்லோவன் தெரிவித்துள்ளார்.