16 மற்றும் 17வயதான இரு சிறுமிகளுடன் ஒரே வீட்டில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த 17 வயதான இளைஞன் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் 10 ஆம் மாதம் 15 வயதான சிறுமி ஒருவரை சட்டபூர்வமற்ற முறையில் மனைவியாக்கியுள்ளதுடன் தனது பெற்றோர் மற்றும் சகோதரியின் உதவியுடன் தனது வீட்டிலேயே அச் சிறுமியுடன் வசித்து வந்துள்ளார்.
இதன் பின்னர் ஒரு மாதம் கழித்து அதே வருடத்தின் 11 ஆவது மாதத்தில் 16 வயதான சிறுமி ஒருவரையும் மனைவியாக்கி தனது வீட்டுக்கு அழைத்து வந்ததுடன் இருவருடனும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இரண்டாவது திருமணத்துக்காக தனது முதலாவது மனைவியான 15 வயது சிறுமி எதிர்ப்பு தெரிவிக்கவே இச்சிறுவன் அவளை தனது சகோதரியின் அறையில் தங்க வைத்துக் கொள்ளுமாறு கூறி 16 வயதான சிறுமியுடன் உறவினை மேற்கொண்டு வந்துள்ளார்.
15 வயதான சிறுமி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் மற்றைய சிறுமி தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்காலப்பகுதியினுள் குறித்த சிறுமிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சிறுவனால் இரு சிறுமிகளும் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரான 17 வயது மாணவன் கண்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் வியருலுவத்த சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சிறுவன் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ள ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.