நமது உடல் கொலஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது.
நம் கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.
கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து இரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரோல் அளவில் 75% உற்பத்தி செய்கின்றன.
25% கொலஸ்ட்ரோல் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிலிருந்து கிடைக்கிறது.
* அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்
* அதிக மாமிச உணவு உண்பது
* அதீத உடற்பருமன் (Obesity)
* உடல் இயக்கக் குறைவான பணிகள்
* உடற்பயிற்சியின்மை
* அதிக தூக்கம்
* புகைப் பழக்கம்
* மன அழுத்தம்
* மதுப்பழக்கம்
* சக்கரைநோய், சிறுநீரகம் மற்றும் தைெராய்ட் சுரப்பி நோய்கள்.
* கருத்தடை மாத்திரைகள்
*பெற்றோர்களுக்கு மிகை கொலஸ்ட்ரோல் இருக்குமானால் அதற்கு காரணமான ஜீன்களை நீங்களும் பெற்றிருக்கக் கூடும்.
பொதுவாக, இரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்.ேரால் இருப்பதற்கான எந்த ஓர் அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. ஆகையால்தான் அது “அமைதியான உயிர்க்கொல்லி” என்று அறியப்படுகிறது.
உடல் பருமன் இல்லாதவர்களுக்கு இரத்தத்தில் கொலஸ்ட்.ேரால் அதிகம் இருக்காது என்று சொல்ல முடியாது. யாருக்கும் வரலாம். இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் தான் தெரிய வரும்.
இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரோலின் அளவு என்பது, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் எடுக்கப்பட்ட மாதிரி (sample) இரத்தத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.
அதிலும் ‘லிபோபுரோட்டீன் ப்ரொஃபைல்’ (lipoprotein profile) எனும் இரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது.
கொலஸ்ட்ரோல் அதிகரிப்பினால் மூளை அடைப்பும் ஏற்படலாம்
எமது கொழுப்பு உணவின் ஓர் அங்கமே கொலஸ்ட்ரோல் ஆகும். இவை ஒரு குறிப்பிட்ட அளவில் இருப்பது எமது உடலுக்கு அவசியம்.
கொலஸ்ட்ரோலில் பல கூறுகள் உண்டு. HDl, LDL, TRIGLYCE RIDES என்பன முக்கிய கூறுகளாகும். இதில் HDL கொலஸ்ரோல் ஆபத்தற்றது. அதிகமாக இருப்பினும் பாதிப்பில்லை. நன்மைதான்.
ஆனால் LDL, TRIGLYCE RIDES என்பன குறிப்பிட்ட அளவுக்கு மேலாக இருப்பது தீங்குகளை விளைவிக்கும்.
மொத்த கொலஸ்ட்ரோல் குருதியில் 200mg இற்கு அதிகமாக இருப்பின் நாம் உஷாரடைய வேண்டும்.
இதுவே 240 mg DL இற்கு அதிகமானால் கொலஸ்ட்ரோல் படிவு குருதிக் குழாய்களின் உட் சுவரில் படிந்து குருதி சீராகப் பயணிப்பதைத் தடுப்பதுடன் இரத்தச் சுற்றினில் குருதி உறைந்து CLOTS உருவாக வழிவகுக்கும்.
இந்நிலை மிகவும் ஆபத்தானது.
இக்குருதிக் கட்டிகள் இதய நாடிகளையோ மூளைக்குச் செல்லும் நாடிகளையோ அடைக்கும் போது மாரடைப்பு மூளையடைப்பு என்பன ஏற்படலாம்.
கொலஸ்ட்ரோல் படிவுகள் குருதிக் குழாய்களில் அதிகமாக படிவதால் குருதி பாயும் சிறு குழாய்களுள் அடைப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு.
இவ் அடைப்புக்கள் சிறியளவில் இருக்கும் போது களைப்பு, மார்பு வலி, தலைவலி முதலான சில அறிகுறிகள் அடிக்கடி தோன்றும்.
ஆனால் அடைப்பு பெரிதாகி குருதி வழங்கல் பாதிப்புறும் போது தீவிர நோய் நிலை ஏற்படும். மூளை அடைப்பினால்பக்கவாதமும் ஏற்படலாம்.
கொலஸ்ட்ரோல் படிவு அதிக கொழுப்பு உணவு வகைகளை உண்பவர்களிலும், எடை அதிகமாக உள்ளவர்களிலும் சிறுவயதிலிருந்தே சிறிது சிறிதாக மெதுவாக படிய ஆரம்பிக்கும்.
ஆண்களில் 25 வயதுக்குப் பின்னரும் பெண்களில் மாத விலக்கு நின்ற பின்னரும் கொலஸ்ட்ரோல் வேகமாக அதிகரிக்கும்.
பெண்களில் மாதவிலக்கு தொடரும் காலங்களில் பால் ஓமோன்கள் கொலஸ்ட்ரோலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஈஸ்ரஜன் குறையும் போது கொலஸ்ரோல் அதிகரிக்கும்.
ஒருவரில் கொலஸ்ட்ரோல் தேவையான அளவை விட அதிகரித்தாலும் வெளியே எதுவித அறிகுறிகளை உடனும் தோற்றுவிப்பதில்லை.
நடுத்தர வயதை அண்மிக்கும் போது இதன் படிவு குருதிக் குழாய்களில் அதிகரிக்கும் போதே அறிகுறிகள் வெளித்தெரிய ஆரம்பிக்கும்.
எதுவும் இது ஏற்படுத்தும் இதர நோய் நிலைகளைப் பொறுத்தே இருக்கும். சற்று காலம் செல்ல இப்படிவுகள் நாடிகளில் அதிகரிக்கும் போது மாரடைப்பு, மூளையடைப்பு அல்லது பக்கவாதம், சிறுநீரக நோய்கள், ஈரல் நோய்கள், கண் பார்வையில் பாதிப்பு உட்பட பல பாதிப்புக்கள் ஏற்படும்.
கொலஸ்ரோல் அதிகரித்துள்ளதை LIPID PROFIFE என்ற குருதிப் பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இரவு சாப்பிட்ட பின்னர் 12 மணித்தியாலங்கள் எதுவும் உண்ணாமல் இருந்து காலையில் இரத்தத்தை பரிசோதிக்க வேண்டும். இடையில் வெறும் தண்ணீரைத் தவிர வேறு நீராகாரங்களும் அருந்தக் கூடாது.
நீரிழிவு, உயர்குருதி அழுத்தம் முதலான நோயுள்ளவர்களும் உடற் பருமன் உள்ளவர்களும் கட்டாயமாக இப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
பரம்பரையில் கொலஸ்ட்ரோல் உள்ளவர்களும் கட்டாயமாக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் மாதவிடாய் நின்று போன பெண்களும் இப் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. உடலுழைப்பு குறைந்தவர்களும் பரிசோதித்தல் வேண்டும்.
கொலஸ்ட்ரோல் அதிகரிப்புக்கு அதிக கொழுப்பான உணவுகளை உட்கொள்வதும் பரம்பரை அலகும் முக்கிய காரணங்களாகும். இது தவிர முன் குறிப்பிட்டது போல உயர் குருதி அழுத்தமும், நீரிழிவு நோயும் அதிக உடலுழைப்பின்மையும் கொலஸ்ட்ரோலை அதிகரிக்க வைக்கின்றன.
வயது அதிகரிக்கும் போது கொலஸ்ட்ரோல் அதிகரிப்பு ஏற்படும்.
மது, புகைத்தல், மனச்சுமை, சூழல் மாசு, சில மருந்துகள் என பிற காரணங்களால் உடலில் கொலஸ்ட்ரோல் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். தவறான உணவுப் பழக்கங்களே என்பதால் சிறு வயதிலிருந்தே உணவுக் கட்டுப்பாட்டைப் பேண வேண்டும்.
அதிகரித்த கொழுப்பு மற்றும் மாமிச உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வளரும் போது கொலஸ்ட்ரோலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகின்றது.
தானிய வகைகள், மரக்கறி வகைகள், இலைக் கறிவகைகள், பழவகைகள் முதலானவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகரித்த கொலஸ்ட்ரோல் இருப்பதாக இனம் காணப்பட்டவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
மாமிசங்கள், எண்ணெய் வகைகள், நெய் முதலான பாற் பொருட்கள் என்பவற்றை இயன்றளவு தவிர்க்க வேண்டும். மது, புகைத்தல் என்பவற்றை முற்றாக தவிர்க்க வேண்டும்.
போதிய உடலுழைப்பு அல்லது தேகாப்பியாசம் செய்ய வேண்டும். நடத்தல், நீந்துதல், துவிச்சக்கர வண்டியில் பயணித்தல் என்பன கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்திட உதவும்.
நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்த நோயாளர்கள் தமது நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். வைத்திய ஆலோசனையுடன் கொலஸ்ட்ரோலின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் மருந்தை பாவிக்க வேண்டும்.
கொலஸ்ட்ரோலின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் மருந்தை உட்கொள்ளாது விடினும் உணவு கட்டுப்பாட்டைத் தொடர வேண்டும்.
மாரடைப்பு மற்றும் ஸ்ரோக் ஆபத்து ஏது நிலை உள்ளவர்கள் தொடர்ந்தும் சிறிய அளவில் கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்தும் மருந்தை பாவிக்க வேண்டும். தேகப் பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
எமது சீரான வாழ்க்கை முறையினால் மிக ஆபத்தான நோய்கள் ஏற்படுவதை இலகுவாக தவிர்க்க முடியும். கொலஸ்ட்ரோல் கொழுப்பு அதிகரிப்பின் ஆபத்துக்கள் பற்றி சிறு வயதிலிருந்தே சுகாதாரக் கல்வி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதன் மூலம் நீண்ட காலம் நோயற்ற சுகவாழ்வை வாழ முடியும். முதுமையிலும் தொல்லைகளின்றி வாழ்ந்திட இது வழி வகுக்கும்.
-டொக்டர் ச.முருகானந்தன்-