ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, March 27
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    பிரதான செய்திகள்

    என் மகளின் தற்கொலைக்கு அவளது காதலனே காரணம்: பிரதியுஷா தாய் குற்றச்சாட்டு

    AdminBy AdminApril 2, 2016Updated:April 4, 2016No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    மும்பை: என் மகளின் மரணத்துக்கு அவளது காதலர் ராகுல்தான் காரணம் என்று பிரதியுஷாவின் தாயார் சோமா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
    பிரதியுஷாவின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை போலீசார் கண்டறிய வேண்டும் என்று பெண் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    மும்பையில் அடுக்குமாடி குடியிப்பு ஒன்றில் வசித்து வந்தவர் டிவி சீரியல் நடிகை பிரதியுஷா பானர்ஜி. 24 வயதான இவர் ‘பாலிகா வாது’, ‘ஹம் ஹெய்னா’ ‘ஆகட்’ உள்ளிட்ட இந்தி டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.
    இந்நிலையில், பிரதியுஷா நேற்று மாலை அவருடைய இல்லத்தில் உள்ள அறையில் மின்விசிறி கம்பியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.
    இது குறித்து மும்பை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரதியுஷாவின் உடலை, பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை குறித்து பிரதியுஷா கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பிரதியுஷாவின் தற்கொலை டிவி நடிகர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதியுஷா கோழை அல்ல, இது திட்டமிட்ட கொலை என்று பிரதியுஷாவின் உறவினர்களும், நண்பர்களும் கூறி வருகின்றனர்.

    பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசும் போது, பிரதியுஷாவும் நானும் ஒன்றாக வாழ்ந்துவந்தோம்.

    ஆனால் கடந்த ஜனவரி 12 அன்று அவளுடைய காதலர் ராகுல் என்னிடம் வந்து அவளை அழைத்துச் செல்வதாகவும் இருவரும்  மாலட் பகுதியில் வசிக்கப் போவதாகவும் கூறினார்.

    மகளும் என்னை ஜம்ஷெட்பூருக்குப் போகச் சொன்னார். அங்குதான் எங்கள் வீடு உள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு அவள், தன் தந்தையிடம் பேசியுள்ளார்.

     

    அப்போது தன் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளதாகக் கூறியுள்ளார். வியாழன் அன்று என்னிடம் பேசியபோது, சோகமாகப் பேசினாள். என் மகளின் மரணத்துக்கு ராகுலே காரணம்.

     

    ஏனெனில் என் மகள் ராகுலுடனான உறவில் மகிழ்ச்சியில்லாமல் இருந்தாள் என்றார். இதனிடையே பிரதியுஷா தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பெண் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சமீனா சபீக் என்ற பெண் சமூக ஆர்வலர், இது மிகவும் சோகமாக சம்பவம், பிரதியுஷாவின் மரணத்தை மேலோட்டமாக விசாரிக்க கூடாது என்று கூறியுள்ளார்.

    பிரதியுஷா தற்கொலை தொடர்பாக அவரது காதலன் ராகுல் ராஜ் சிங்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரதியுஷா ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Post Views: 4

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஆம்புலன்சில் வெடிபொருள்: 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதி பேட்டி

    March 20, 2023

    அதிர்ச்சி தகவல் என்ன நடக்கும்?

    March 7, 2023

    காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? – இளைஞரின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்

    February 28, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2016
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023

    டிசம்பரிற்கு முன்னர் தேர்தல் -மகிந்த

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • (no title)
    • “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    • இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version