வவுனியா, குருமன்காடு, சிங்கள பிரதேச செயலக வீதியில் வித்தியாவின் குடும்பத்தினருக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று மத்தியம் இடம்பெற்றபோதே வித்தியாவின் தாயார் இக் கோரிக்கையை முன்வைத்தார்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரை ஜனாதிபதி யாழ்ப்பணத்தில் சந்தித்திருந்தபோது தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கருத்தி வவுனியாவில் வீடொன்றை பெற்றுத்தருமாறு கோரியிருந்தார்.
இந் நிலையில் வவுனியாவில் வீடு அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இதனை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வித்தியாவின் தாயார் மற்றும் சகோதரர்களிடம் கையளிக்கும் போதே இக்கோரிக்கையை முன்வைத்திருந்ததுடன் மகளின் கொலை தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந் நிகழ்வில் ஜனாதிபதியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலளார், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தன, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான், இந்திய துணைத்தூதர் நடராஜன், மற்றும் அரச அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.