கிளிநொச்சி, பூநகரி கறுக்காய்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேயிடத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தமிழ்செல்வி (வயது 43) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மயக்கமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை (02) அனுமதிக்;கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியதிகாரி என்.சிவரூபன் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார். உடலில் நீர்த்தன்மை குறைந்தமையால் இந்தப் பெண் உயிரிழந்ததாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழில் சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு
யாழ். கொடிகாமம் பகுதியில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு விஷேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறையில் இருந்து கொழும்பிற்கு 95 கிலோ 865 கிராம் நிறையுடைய சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகளை கடத்த முயற்சித்த, நிலையில் அந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டு, கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு விஷேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 1.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கஞ்சாவினை கொழும்பிற்கு கடத்த முற்பட்ட நபர் கஞ்சா பொதியினை விட்டுவிட்டு, தப்பி ஓடியுள்ளார்.
எனினும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மோட்டார் சைக்கிளின் இலக்கத்தினை வைத்து தப்பி ஓடிய நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாகவும் கொழும்பு விஷேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.