விடுமுறைக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அதிபரின் அறைக்கு சென்ற ஆசிரியையை, குறித்த பாடசாலையின் அதிபரொருவர் தும்புத்தடியால் தாக்கிய சம்பவமொன்று பாணந்துறை மஹாநாம வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் குறித்த பாடசாலையின் அதிபரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
ஆசிரியையின் பிள்ளையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும், தெரிவித்தனர்.
மேலும் இப்படி ஒரு சம்பவமும் நடந்துள்ளது.
மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் அதிபர்மீது ஆசிரியர் நடாத்திய தாக்குதலில் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பாடசாலையின் குறைகளையும், பாடசாலைக்கு செல்லும் வீதிகளின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை எழுதி அதில் கையொப்பம் இட்டுத்தரும்படி அதிபரிடம் கோரியுள்ளார்.
அதிபர் அதற்கு மறுப்புத்தெரிவித்தபோது, ஆத்திரமடைந்த ஆசிரியர் அதிபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
குறித்த விடயம் வலயக்கல்விப் பணிமனைக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு சென்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் அடங்கிய குழுவினர் விசாரணை நடாத்தியதன் பிரகாரம் குறித்த ஆசிரியருக்கு உடனடியாக தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தக்குதலுக்கு உள்ளான அதிபர் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யதுள்ளார். தாக்குதலின் காரணமாக காதில் எற்பட்ட கோளாறினால் சிகிச்சைகளுக்காக அம்பாரை வைத்தியசாலையில் குறித்த அதிபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.