ரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிக் கொண்டிருக்கும் படம் கபாலி. தங்கள் பங்குக்கு ஏதாவதொரு செயலைச் செய்து எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
இவர்களுக்கு என்னாச்சு? இவ்வளவு கொண்டாட்டத்தில் இருக்கிறார்களே என்று எல்லோரும் சொல்கிற மாதிரி, ரஜினி உருவத்தை சாக்லெட் சிலையாக வடிவமைத்து கபாலியை வைரல் ஹிட் லிஸ்டில் தக்கவைத்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
ரஜினி நடித்துவரும் கபாலி படத்தில் அவரது தோற்றத்தை கவர்ந்த சென்னையிலுள்ள தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று 600 கிலோ சாக்லெட்டில் அவரது உருவத்தை சிலையாக வடிவமைத்துள்ளது.
கபாலியில் ரஜினி வெள்ளை தலைமுடியும், தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதால் இந்த சாக்லெட் ரஜினிக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.
அந்த பேக்கரியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சாக்லெட் ரஜினியைப் பார்த்து ரசிக்கவே ரசிக பட்டாளங்கள் குவிந்துவருகின்றன. அதுமட்டுமில்லாமல் சாக்லெட் ரஜினியுடன் இளசுகள் செல்ஃபி எடுத்து இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கிவருவது குறிப்பிடத்தக்கது.
கபாலி படம் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் நிலையில் இவ்வாறான சுவாரஸ்ய நிகழ்வுகள் படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பையும் விளம்பரத்தையும் ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ரஜினி கேங்ஸ்டராக நடிக்கிறார். தன்ஷிகா, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்தை மெட்ராஸ் ரஞ்சித் இயக்கிவருகிறார்.
நானும் ரஜினியும் சேர்ந்து நடித்தால் என்னவாகும்? – கமல்ஹாசன் பேட்டி
“இதுவரை செய்த சாதனைக்காக இந்த விருதைப் பெற்றதாக நினைக்கவில்லை. இனி செய்யவேண்டியவை நிறைய இருப்பதற்காகவே இவ்விருதைப் பெற்றதாக நினைக்கிறேன்” என்று பிரான்ஸ் நாட்டின் ஹன்றி லாங்லாயிஸ் விருதைப் பெற்ற பிறகு கமல் கூறிய வார்த்தைகள் இவை.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் நடைபெற்ற விழாவில், இந்திய திரையுலகிற்கு சிறப்பான பங்களிப்பு செய்தமைக்காக கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் “ஹன்றி லாங்லாயிஸ்” திரைப்பட விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவைத் தொடர்ந்து பாரிஸ் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியிலிருந்து சில கேள்விகளும், உலகநாயகனின் பதில்களும் இங்கே,
இந்த விருதுபற்றி உங்களின் கருத்து ?
இந்த விருதைப் பெறும் முதல் தமிழ் கலைஞர் நான் என்பதால் பல கலைஞர்களின் சார்பில் தான் இந்த விருதை பெற்றுக்கொள்கிறேன். சார்லிசாப்ளின் உள்ளிட்ட பல கலைஞர்கள் பெற்ற இவ்விருது பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது.
மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கக் காத்திருப்பதாக முன்னரே சொல்லிருக்கிறீர்கள். அது எப்போது சாத்தியமாகும்?
இனிமே எப்போ நடக்கும் என்று தெரியவில்லை. நல்ல நடிகர்கள் மணிரத்னத்திற்கும், நல்ல கதைகள் எனக்கும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.
அவரும், நானும் இயக்கத்திலும் பிஸியாக இருக்கிறோம். எங்களிடமிருந்து ரெட்டிப்புப் படங்களாக வரட்டுமே. நாங்கள் இணையும் காலம் வரும்போது இணைந்து செயல்படுவோம்.
ரஜினிகாந்தும் நீங்களும் மீண்டும் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருக்கிறதா?
நானும், ரஜினியும் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்க ஒப்புக்கொண்டால், படமெடுக்கக் காசு இருக்காது. அந்த ஒரு காரணத்தினால் தான் நாங்கள் இருவரும் நடிக்காமல் இருக்கிறோம். தனித்தனியாக நடிக்க தொடங்கியதற்கும் இது தான் காரணம்.
உங்களின் கனவுப்படம் “மருதநாயகம்” பற்றியான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறதே?
எல்லோருக்குமே மருதநாயகம் மேல் ஆர்வம் அதிகரித்துவிட்டது. பிரான்ஸிலும், அமெரிக்காவிலும் அதைப்பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவரை பொறுமையாக இருந்த எனக்கு இன்னும் சற்று பொறுமை காப்பது பெரிய விஷயமல்ல.
உங்களின் அடுத்தபடம்?
என் மகள் ஸ்ருதியுடன் நான் நடிக்கும் முதல் படம். நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக உருவாகிவருகிறது.
முழுமையான வீடியோ நேர்காணலுக்கு: