மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில் ஆறு மற்றும் வாவியில் இருந்து இரு அடையாளம் காணப்படாத ஆண்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தொிவித்தனர்.
மட்டக்களப்பு நகரில் உள்ள வாவியில் இன்று பகல் சுமார் 20 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் தொிவித்தனர்.
இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பொியபோரதீவு பிரதான வீதியில் உள்ள பாலத்தின் கீழ் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாலம் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
துவிச்சக்கர வண்டியும் குறித்த சடலத்திற்கு அருகில் காணப்பட்டதாகவும் துவிச்சக்கர வண்டியில் குறித்த வீதியில் பயணிக்கும்போது பாலத்திற்குள் வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் தொிவித்தனர்.