புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி சிக்கியுள்ள போதும் அது தொடர்பாக நீதிமன்றத்தில் எந்தவிதமான பிரஸ்தாபங்களையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் செய்யாமல் உள்ளமை தொடர்பாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
கிடைத்துள்ள வீடியோ ஆதாரத்தில் வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் பல தடையங்கள் காணப்பட்டிருந்தது.
இருப்பினும் அத்தடையங்களை அழிக்கும் முகமாக பிரபல சட்டத்தரணி கே.வி.தவராஜா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் செயற்பட்டமை காரணமாகவே அவ்வீடியோ ஆதாரத்தினை வெளிப்படுத்துவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் பின்னடித்து வருவதாக எமது இணையத்தளத்திற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
வித்தியா கடத்திச் செல்லப்பட்ட பின்னர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின்படி மேலும் 2 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இறுதியாக நடைபெற்ற வழக்கு விசாரைணன் போது மன்றில் தோன்றியிருந்த குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி இவ்வழக்கில் 13 ஆவது சந்தேக நபராக ஒருவரை கைது செய்யப் போவதாகவும் தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இறுதியாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடாத்திய விசாரணைகளின் அடிப்படையில் வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட போது வீடியோ பதிவுகளை சந்தேக நபர்கள் எடுத்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தேக நபர்களிடம் இருந்த கைத்தொலைபேசி, லப்ரெப், ரப் போன்றவை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் முதலில் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் 6 ஆவது சந்தேக நபரின் உறவினர் ஒருவரிடம் இருந்து அவ் வீடியோ பதிவு செய்யப்பட்ட மெமரிக் காட்டினை மீட்டுள்ளனர்.
அதில் வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட 30 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டள்ளது.
இருப்பினும் மெமரிக் காட்டினை மீட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் அது தொடர்பான நீதி மன்றில் பிரஸ்தாபங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
வித்தியா கொலை செய்யப்பட்ட பின்னர் பிலபல சட்டத்தரணி கே.வி.தவராஜா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் இணைந்து வித்தியாவின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இருந்த பற்றைக் காடுகள் அனைத்தினையும் அழித்திருந்தனர்.
இதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருந்தது.
இந்நிலையில் வித்தியாவின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்த பற்றைக்காடுகள் அழிக்கப்பட்டமை, தடையங்களை அழிப்பதற்கான முயட்சி என்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் துவாரகேஸ்வரனால் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன்படியே குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கிடைத்துள்ள வித்தியா கொலை சம்பவம் தொடர்பா வீடியோ பதிவினை வெளியிட்டால் குறித்த சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற காரணத்தினால் அவ்வீடியோ ஆதாரம் தொடர்பாக தற்போதுவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி- மூலம்
http://ttnnews.com/
வித்தியா படுகொலை வழக்கில் மறைக்கப்படும் உண்மைகள் எனும் தலைப்பில் இது சம்பந்தமாக நாம் ஏற்கனவே செய்தி ஒன்றை ஆதாரத்துடன் இலக்கியா இணையதளத்தில் பிரசுரித்திருந்தோம் அதனையும் பார்வையிடவும்.
மே மாதம் 13 ஆம் திகதி 2014 பாடசாலைக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில், திடீரென அதேமாதம் 31 ஆம் திகதி கே.வி. தவராசா தலைமையில் புங்குடுதீவில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, வித்தியா படுகொலை செய்யப்பட்ட பிரதேசத்தை அன்மித்த பகுதிகளில் ‘டோசர்’ கொண்டு அழிக்கபட்டதற்கான ஆதாரங்களும், சான்றுகள் உள்ளதாக நமக்கு அனப்பிவைக்கப்பட்ட ஆதாரங்கள் இவை.. (செய்தியை பார்வையிட கீழே உள்ள லிங்கை அழுத்தவும்)
இயந்திரம்’ கொண்டு வித்தியா கொலை நடந்த பிரதேசத்தை தரைமட்டமாக்கியது யாா? அதிர்ச்சி தகவல்கள்!!
மாணவி வித்தியா உயிர் பிரிந்த இடம் இதோ இதுதான்.. -(அதிர்ச்சி படங்கள், வீடியோ)