சீனாவில் தெருவோரக்கடை வைத்திருந்த பாட்டியை பொலிசாரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக குட்டிப்பையன் ஒருவன் ஹீரோவாக மாறி அசத்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சீனாவில் மக்கள் நடமாட்டம் அதிமாக உள்ள இடத்தில் கடை வைத்திருந்த மூதாட்டியிடம், கடையை அகற்றுமாறு பொலிசார் தெரிவிக்க முன்வந்துள்ளனர்.
அப்போது பாட்டியின் பேரன், உலோக குழாயினை எடுத்துக்கொண்டு வந்து கோபத்துடன், எனது பாட்டியை யாரும் தொடக்கூடாது, எல்லோரும் தொலைவில் செல்லுங்கள் என்று கத்துகிறான்.
பின்னர், அந்த உலோக குழாயினை தூக்கியெறிகிறான், கொஞ்சம் தொலைவில் இருந்து நடந்து வரும் பொலிஸ் அதிகாரி அச்சிறுவனை அருகில் உள்ள சோபாவில் போய் அமர வைக்கிறார், ஆனால் அச்சிறுவனோ, மீண்டும் போபத்துடன் கத்தியவாறு பொலிஸ் அதிகாரியை அடிக்கிறான்.
இந்த சம்பவத்தை பொலிசார் உட்பட அங்கு சுற்றியிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்து ரசித்துள்ளனர்.