பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறைக்கைதிகளால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மிகவும் அழகாக இருந்தார் அவரை முதலில் நானே பலாத்காரம் செய்திருக்க வேண்டும் என தேர்தலில் போட்டியிடும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டிகாங் டுடெர்ட் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் டாவோ நகர மேயரான ரோட்ரிகோ டிகாங் டுடெர்ட் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி க்வீசான் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசிய போதே இதை தெரிவித்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
1989 ஆம் ஆண்டு சிறைக் கைதிகளால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ சேவகி ஜாக்குலின் ஹாமில் பலாத்காரம் செய்யப்பட்டதை நினைத்து எனக்கு கடும் கோபம் வந்தது.
ஆனால் அவர் அழகாக இருந்தார். அவரை மேயர் (தன்னை தான் கூறுகிறார்) தானே முதலில் பலாத்காரம் செய்திருக்க வேண்டும். இவ்வாறு வீணாகிவிட்டதே என்று தெரிவித்துள்ளார்.
ரோட்ரிகோ டாவோ நகர மேயராக முதன்முதலாக பதவியேற்றபோது 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாவோ நகரில் உள்ள சிறையில் இருந்த கைதிகள் சிலர் பொலிஸ் துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக்குலின் ஹாமில் உள்பட 15 பேரை பிணையக்கைதிகளாக பிடித்தனர்.
கைதிகள் ஜாக்குலினை பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் வந்து ஆயுதம் வைத்திருந்த கைதிகளை சுட்டுக் கொன்றனர்.
அப்போது ஜாக்குலினின் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோட்ரிகோவின் பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.