ஜப்பானிய மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற சிம்பன்ஸி ஒன்று மின்சார கம்பிகளில் தாவித் திரிந்த நிலையில் துரத்திப் பிடிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.
சச்சா எனப் பெயரிடப்பட்ட 24 வயதான சிம்பன்ஸி, ஜப்பானின் சேன்டாய் நகருக்கு அருகிலுள்ள யஜியாமா விலங்கியல் பூங்காவில் வசித்து வந்தது.
கடந்த வியாழக்கிழமை அங்கிருந்த மேற்படி சிம்பன்ஸி வெளியேறியது.
அதனை துரத்திப் பிடிப்பதற்கு மிருகக் காட்சிச்சாலை ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டனர். அச் சிம்பன்ஸி, மின் கம்பமொன்றில் ஏறியபின் மின் கம்பிகளில் தாவித் திரிந்தது.
பின்னர் மிருக வைத்தியர் ஒருவர் மூலம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அதையடுத்து, சிறிது நேரத்தின்பின் மின் கம்பியிலிருந்து தனது பிடியை நழுவவிட்ட அச்சிம்பன்ஸி கீழே வீழ்ந்தது.
அதன்பின் மீட்புக் குழுவினர் அதனை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். தற்போது இச் சிம்பன்ஸி முழுமையாக குணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.