இலங்கையில் தனி ஈழத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளை தமது கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் கௌரமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கு தனி ஈழம் உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கான சகல நடவடிக்கைகளும் தம்மால் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் திராவிட முன்னேற்றக் கழகமே ஈழத் தமிழர்களை காட்டிக் கொடுத்ததாகவும், ஈழத் தமிழர்கள் சந்தித்த பாரிய இழப்புகளுக்கு திராவிட முன்னேற்றக்கழகமே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் தமிழ் நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.