இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், சிவகரனை கைது செய்ய வந்த அதிகாரிகள் துண்டு ஆவணமொன்றை வழங்கியுள்ளனர்.
குறித்த துண்டில், ‘பாதுகாப்பு அமைச்சின் கீழ், அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ், அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சி பத்திரம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவகரனை கைதுசெய்ததற்கான காரணம் எதையும் அதிகாரிகள் சொல்லவில்லை. கைதுசெய்யப்பட்ட சிவகரன், வவுனியா பயங்கரவாத விசாரனை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் திருமலை புலனாய்வு பொறுப்பாளர் கலையரசன் கைது
27-101-2016
முன்னாள் விடுதலைப் புலிகளின் திருகோணமலை புலணாய்வுப் பொறுப்பாளர் கலையரசன் என்றளைக்கப்படும் அறிவளகன் திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (26) காலையில் பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
27-101-2016
முன்னாள் விடுதலைப் புலிகளின் திருகோணமலை புலணாய்வுப் பொறுப்பாளர் கலையரசன் என்றளைக்கப்படும் அறிவளகன் திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (26) காலையில் பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த நபர் கடந்த 2009 ஆம் ஆண்டு அம்பாரை மாவட்ட தளபதி ராம் என்பவருடன் திருகோணமலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்ன் 2013 ஆம் ஆண்டு விடுதலையாகி வந்து உறவினருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவரை கடந்த இரு தினங்களுக்கு மன்னர் கைது செய்வதற்கு பயங்கரவாத பிரிவினர் முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து நேற்று காலை திருகொணமலை நகர் அரசடிப் பகுதியில்வைத்து கைது செய்து விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .
இந்த நிலையில் இவரை கடந்த இரு தினங்களுக்கு மன்னர் கைது செய்வதற்கு பயங்கரவாத பிரிவினர் முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து நேற்று காலை திருகொணமலை நகர் அரசடிப் பகுதியில்வைத்து கைது செய்து விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .
இதேவேளை முன்னாள் விடுதலைப் புலிகளின் ராம் மற்றும் நகுலனைத் தொடர்ந்து கலையரசன் கைது செய்யப்பட்டதையடுத்து புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப்புலிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .