நான் இராணுவத்தில் இருந்த காலத்தில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்திருந்த்தால் மீண்டும் உயிருடன் வெளியே செல்ல இடமளித்திருக்க மாட்டேன் என புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார்.
இன்று காலை எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்னால் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 16ஆம் திகதி எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர், பரவிப்பாஞ்சானில் உள்ள கஜபா படைப்பிரிவின் தலைமையக இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாகத் தெரிவித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த த்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்;
இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்த இரா.சம்பந்தன் மீண்டும் உயிருடன் வெளியே வந்ததையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.