மும்பை: நடிகை இலியானா விரைவில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமான இலியானா தொடர்ந்து ‘நண்பன்’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார். ‘நண்பன்’ இலியானாவுக்கு பெயரை வாங்கிக் கொடுத்தாலும் தமிழில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் இல்லை.
இதனால் அவரின் கவனம் பாலிவுட் பக்கம் திரும்பியது. அக்ஷய்குமாருடன் இலியானா நடித்த ‘ருஸ்தம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ‘பாட்சகோ’ என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது நீண்டநாள் காதலரும் புகைப்படக் கலைஞருமான ஆண்ட்ரூ என்பவரை, இலியானா திருமணம் செய்து கொள்ள போவதாகக் கூறப்படுகிறது.இதற்காக புதிய படங்களில் ஒப்பந்தமாவதை அவர் தவிர்த்து வருகிறார்.விரைவில் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவரின் திருமணமும் நடைபெறும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்குப் பின் இலியானா தொடர்ந்து நடிப்பாரா? என்பது தெரியவில்லை.
நயன்தாராதான் என் ரோல் மாடல்!- கீர்த்தி சுரேஷ்
இந்த நடிகைகளிடம் பத்திரிகையாளர்கள் எடுக்கும் பேட்டிகளைக் கூர்ந்து கவனித்தால் அதற்கான கேள்விகளை எளிதில் பட்டியலிட்டுவிடலாம்.
திரும்ப திரும்ப ஒரே செட் கேள்விகள்தான் இருக்கும். அந்த வகையில் எல்லா ஹீரோயினிடமும் கேட்கப்படும் கேள்வி உங்க ரோல் மாடல் யாரு?
கண்டிப்பாக அன்னை தெரசா என்றோ அன்னி பெசண்ட் என்றோ பதில் வராது என்ற நம்பிக்கையில் இந்த கேள்வி கேட்கப்படும். நடிகையும் இப்போது ஃபீல்டில் இல்லாத ஒரு சீனியர் நடிகையையோ, அல்லது பாலிவுட் பக்கம் போன நடிகையோ சொல்வார்கள்.
ஆனால் இந்த விஷயத்தில் கீர்த்தி சுரேஷ் பலே கில்லாடி. சமீபத்தில் அப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு, “எனக்கு ரோல் மாடல் நயன்தாராதான்.
ஹிந்தியில எத்தனையோ ஆஃபர் வந்தாலும் அந்த பக்கம் ஒதுங்காம இங்கேயே இருக்காங்க. இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படக் கூடாதுங்கற அவங்க ஃபார்முலாவைத்தான் ஃபாலோ பண்றேன்,” என்று நயனுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.ஆக, நயனின் குட்புக்கில் சேர்ந்துவிட்டார் கீர்த்திசுரேஷ். அங்கிருந்தும் பலமான ரெகமெண்டேஷன்ஸ் வரும்!
‘வேறு வழியில்லை… இந்த சிம்புவை விட்டு வெளுக்க வேண்டியதுதான்!’- கடுப்பில் கவுதம் மேனன்
04-07-2016
04-07-2016
இதற்கு முன்பு எந்த பேட்டியிலும் சிம்புவை இந்த அளவுக்கு கவுதம்மேனன் டேமேஜ் பண்ணியதில்லை தன்னுடைய ஹீரோவை எங்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தவரையே, தன்னை பற்றி பக்கம் பக்கமாக புலம்பி பேட்டியளிக்க வைத்துவிட்டார் சிம்பு.
அந்த அளவுக்கு டார்ச்சர் கொடுத்திருக்கிறார் போல… இவ்வளவு நடந்துடுச்சு… இனிமே என்ன…? என்று சிம்பு விஷயத்தில் இறங்கி அடிக்கிறார் கவுதம்.
அந்த அளவுக்கு டார்ச்சர் கொடுத்திருக்கிறார் போல… இவ்வளவு நடந்துடுச்சு… இனிமே என்ன…? என்று சிம்பு விஷயத்தில் இறங்கி அடிக்கிறார் கவுதம்.
அச்சம் என்பது மடமையடா படத்தின் தமிழ் ஆடியோ வெளியீட்டு விழாவை சிம்புவை கடுப்பாக்குவதற்காக தள்ளி வைத்தவர், இப்போது தெலுங்குப் பதிப்புக்கான வெளியீட்டை பெரிய அளவில் நடத்தியும் விட்டார்.
அடுத்ததாக சிம்பு மீது இயக்குனர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.நடிகர் சங்கம் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. சிம்பு ஒத்துழைக்க மறுத்தால் தெலுங்கு பதிப்பை ரிலீஸ் செய்து படத்தையே காலி செய்தாலும் செய்வார் கவுதம்மேனன் என்கிறார்கள்.