யாழ் நாயன்மார்கட்டுக் குளத்துக்கு அருகில் மாமரம் ஒன்றில் ஐயர் என சந்தேகிக்கப்படும் பூநுால் அணிந்த ஒருவரின் சடலம் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது.
குறித்த நபர் கொலைசெய்யப்பட்டு அங்கு கொண்டு வந்து துாக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சுன்னாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு
சுன்னாகம், கந்தரோடை அருளானந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் 22 வயதான தெய்வேந்திரநாதன் ஜெனித்தா எனும் யுவதி துாக்கில் தொங்கி மரணமாகியுள்ளார்.
நேற்றுக் காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் தனது துப்பட்டாவை கொண்டே யுவதி துாக்கில் தொங்கியதாகத் தெரியவருகின்றது.
சடலம் விசாரணைகளுக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் குற்றத்தடுப்புப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்