பண்டாரகம, களுத்துறை பாதையில் மொரந்துட்டுவ, கோனதுவ பிரதேசத்தில் நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பாதையை கடக்க முற்பட்ட போது வேன்னொன்றில் மோதுண்டுள்ளார்.
இந்த சம்பவம் அந்த வேனில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 76 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை என தெரியவந்துள்ளது.
விபத்தின் பின்னர் அவர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.