துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி ஒன்றில் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
துருக்கி நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் (Binali Yildirim ) உள்ளார்.
துருக்கி டி.வி.சானல்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் துருக்கி ஆட்சியை ராணுவம் கைப்பற்றிவிட்டதாக கூறப்பட்டது.
இது குறித்து மற்றொரு டி.வி.சானல் ஒன்றிற்கு பிரதமர் Binali Yildirim பேட்டியளித்தார். அதில் எனது ஆட்சியை கவிழ்த்து ராணுவம் கைப்பற்ற முயற்சி செய்கிறது.
இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
ராணுவத்தை தூண்டிவிடும் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
இந்நிலையில் துருக்கியின் உள்ளூர் சானல்கள்வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த வெள்ளியன்று இரவில் துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள அரசு மாளிகையினை ராணுவம் முற்றுகையிட்டு நிர்வாகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது.
மேலும் இரண்டு முக்கிய பாலங்களான போஸ்பரஸ், சுல்தான் முகமதுஆகிய பாலங்கள் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே தலைநகர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள Ataturk சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.
மட்டுமின்றி முக்கிய தலைவர்களையும் அரசு அதிகாரிகளையும் ராணுவம் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் முடக்கியுள்ள ராணுவம் அரசு தொலைக்காட்சியையும் முடக்கியுள்ளது.
துருக்கியின் தென் பகுதியில் அமைந்துள்ள Bodrum பகுதியில் விடுமுறையை கழிக்க சென்றுள்ள ஜனாதிபதி எர்டோகன் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாவில்லை.
ஜனநாயகத்தை பாதுகாக்கவும் மனித உரிமைகளை மீட்கவும் ஆட்சியை கவிழ்க்க வேண்டி வந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டதாகவும் அந்த டி.வி.சானல்கள் தெரியவந்ததால், துருக்கியில் பரபரப்பு காணப்படுகிறது.
roops have established checkpoints across strategic locations in cities around Turkey and have imposed martial law
President Erdogan used ‘FaceTime’ to talk to a journalist on private run media to claim he was still in full control of the country
Eyewitnesses have posted photographs of a large explosion in the capital Ankara amid the Turkish military takeover
Tanks and armoured personnel carriers have seized the main airport in Ankara as well as strategic bridges in Istanbul