யாழ்ப்பாணம் – தென்மராட்சி – தச்சன் தோப்பு – அம்மன் கோவில் வீதியில் இளம் குடும்பப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் இன்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
30 வயதுடைய சிறீதரன் நதியா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.