இந்தப் பாத­யாத்­தி­ரைக்கு முன்­னின்று பணி­யாற்­றிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ மீண்டும் விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்டுள்ள சூழலில், மஹிந்த ராஜபக் ஷ நேர­டி­யா­கவே களத்தில் இறங்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கிறார்.

சில நாட்­க­ளுக்கு முன்னர், மஹிந்த ராஜபக் ஷ ஒரு கூட்­டத்தில் பேசிய போது, இந்த ஆட்­சியைக் கவிழ்ப்­பது ஒன்றும் கடி­ன­மான காரியமில்லை என்று கூறி­யி­ருந்தார்.

ஆட்­சிக்­க­விழ்ப்­புக்­கான முயற்­சி­களில் மஹிந்த ராஜபக் ஷ இப்­போதே இறங்கி விட்டார் என்­ப­தையே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டமை உணர்த்தி நிற்கிறது.

நிழல் அமைச்­ச­ரவை என்ற ஆயுதம் ஆரம்­பத்­தி­லேயே பிசு­பி­சுத்துப் போய் விட்ட நிலையில், அர­சாங்­கத்­துக்கு எதி­ரான அடுத்த ஆயுதமாக, பாத­யாத்­தி­ரையை கையில் எடுத்துக் கொண்­டி­ருக்­கிறார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ.

வரும் 28ஆம் திகதி கண்­டியில் இருந்து, கொழும்பு நோக்கி நடத்­தப்­ப­ட­வுள்ள இந்த ஐந்து நாள் பாத­யாத்­தி­ரையை அவ்­வ­ளவு சாதாரணமான விட­ய­மாக எடுத்துக் கொள்ள முடி­யாது.

பண்­டா-­ -செல்வா ஒப்­பந்­தத்­துக்கு எதி­ராக, ஜே.ஆர். ஜெய­வர்­தன கண்டி நோக்கி நடத்­திய பாத­யாத்­தி­ரைக்கு இது சற்றும் சளைத்­த­தாக இருக்கப் போவ­தில்லை.

ஜே.ஆரின் பாத யாத்­திரை, பண்­டா -­-செல்வா ஒப்­பந்­தத்தைக் கிழித்துப் போட வைத்­தது.

மஹிந்த ராஜபக் ஷ இப்­போது நடத்தப் போகின்ற பாத­யாத்­திரை, அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­ன­தாக மட்­டு­மன்றி, அர­சாங்­கத்தின் நகர்வுகளை முடக்கும் நோக்­கத்தைக் கொண்­ட­தா­கவும் இருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

இந்தப் பாத­யாத்­தி­ரைக்கு முன்­னின்று பணி­யாற்­றிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ மீண்டும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டுள்ள சூழலில், மஹிந்த ராஜபக் ஷ நேர­டி­யா­கவே களத்தில் இறங்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கிறார்.

சில நாட்­க­ளுக்கு முன்னர், மஹிந்த ராஜபக் ஷ ஒரு கூட்­டத்தில் பேசிய போது, இந்த ஆட்­சியைக் கவிழ்ப்­பது ஒன்றும் கடி­ன­மான காரியமில்லை என்று கூறி­யி­ருந்தார்.

ஆட்­சிக்­க­விழ்ப்­புக்­கான முயற்­சி­களில் மஹிந்த ராஜபக் ஷ இப்­போதே இறங்கி விட்டார் என்­ப­தையே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டமை உணர்த்தி நிற்­கி­றது.

அது­மாத்­தி­ர­மன்றி, அர­சாங்­கத்தை முடக்­கு­கின்ற ஒரு மூலோ­பா­யத்­தையும் மஹிந்த ராஜபக் ஷ தரப்பு கையாளத் தொடங்­கி­யுள்­ளது.

குறிப்­பாக, சர்­வ­தேச சமூ­கத்­துடன் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொண்ட விட­யங்­களை நிறை­வேற்ற விடாமல் தடுப்­பது இந்த உத்தியின் முதல் அம்­ச­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

கடந்­த­வாரம் மஹிந்த ராஜபக் ஷ ஒரு அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார். காணா­மற்­போ­னோ­ருக்­கான செய­லகம் தொடர்­பாக அவர் வெளி­யிட்­டி­ருந்த அறிக்கை அது.

படை­யி­னரைப் பழி­வாங்­கு­வ­தற்­கா­கவே, இந்த செய­லகம் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ள­தாக மஹிந்த ராஜபக் ஷ அந்த அறிக்­கையில் குறிப்பிட்டி­ருந்தார்.

காணா­மற்­போ­னோ­ருக்­கான செய­ல­கத்தை உரு­வாக்­கு­வது தொடர்­பான சட்­டத்­தி­ருத்தம் ஒன்றை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வருவதற்­கான முயற்­சி­களில் அர­சாங்கம் ஈடு­பட்­டி­ருக்கும் நிலையில் தான், அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் மஹிந்த ராஜ­பக் ஷவின் இந்த அறிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

இந்த சட்டத் திருத்­தத்தை நிறை­வேற்றத் துணை­போகும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், நாட்­டையும், படை­யி­ன­ரையும் காட்டிக் கொடுத்­த­தற்­கான பொறுப்பை ஏற்க வேண்­டி­யி­ருக்கும் என்றும் அவர் எச்­ச­ரித்­தி­ருக்­கிறார்.

இது அர­சாங்­கத்தில் இணைந்­துள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் குழப்­பு­கின்ற- அவர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கின்ற செய்தி மாத்­தி­ர­மல்ல.

படை­யி­னரைத் தண்­டிப்­ப­தற்­காக அர­சாங்கம் தயா­ராகி வரு­கி­றது என்ற செய்­தியை, சிங்­கள மக்­க­ளுக்கும் இந்த அறிக்கை மூலம் அவர் சொல்ல முற்­பட்­டி­ருக்­கிறார்.

காணா­மற்­போ­னோ­ருக்­கான செய­லகம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பெரி­ய­ளவில் நன்மை தரும் ஒன்­றாக இருக்­காது என்று, மனித உரிமைகள் சட்­டத்­த­ரணி இரத்­தி­னவேல் போன்­ற­வர்கள் கருத்து வெளி­யிட்­டுள்ள நிலையில், சர்­வ­தேச சமூகம் இதனை பொறுப்புக்கூறல் பொறி­மு­றையை உரு­வாக்கும் பொறி­மு­றையின் ஒரு கட்­ட­மா­கவே பார்க்­கின்­றது என்­பதை மறந்து விட முடி­யாது.

காணா­மற்­போனோர் தொடர்­பான செய­ல­கத்தை உரு­வாக்க அர­சாங்கம் எடுத்­துள்ள முயற்­சியை பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான ஒரு முதல்படி என்­பதை பல்­வேறு நாடு­களும் ஏற்றுக் கொண்­டுள்ள நிலையில், அதனைக் குழப்­பு­வ­தையே மஹிந்த ராஜபக் ஷ இப்­போது தனது இலக்­காக மாற்­றி­யுள்ளார் போலத் தெரி­கி­றது.

இந்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்டால், படை­யினர் பாதிக்­கப்­ப­டு­வார்கள், பழி­வாங்­கப்­ப­டு­வார்கள் என்ற மஹிந்த ராஜபக் ஷ தொடுதுள்ள போரின் அடிப்­படை நோக்கம், படை­யி­னரைப் பாது­காப்­பதோ அவர்கள் மீது கொண்­டுள்ள அக்­க­றையோ அல்ல.

இந்தச் சட்­டத்தை நிறை­வேற்­றாமல் தடுப்­பதன் மூலம், சர்­வ­தேச சமூ­கத்­துக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்ற முடி­யாத நிலைக்கு இலங்கை   அர­சாங்­கத்தை தள்ள முடியும் என்றும், தன் மீது வஞ்சம் கொண்­டுள்ள சர்­வ­தேச சமூ­கத்­துக்கு பதி­லடி கொடுப்பதா­கவும் அமையும் என்று மஹிந்த ராஜபக் ஷ நினைக்­கிறார்.

அண்­மையில் கூட எதற்­காக தன்னை மேற்­கு­லகம் பழி­வாங்­கு­கி­றது என்று தெரி­ய­வில்லை என்று ஆதங்­கப்­பட்­டி­ருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.

ஜனா­தி­பதித் தேர்­தலில் மாத்­தி­ர­மன்றி, அதற்குப் பின்­னரும் அர­சி­யலில் தன்னைத் தலை­யெ­டுக்க விடாமல் மேற்­கு­லகம் சதி செய்வதாகவே மஹிந்த ராஜபக் ஷ கரு­து­கிறார்.

இதனால் தான் தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் இடையில் உள்ள நெருக்­கத்தை உடைப்­ப­தற்­கான ஒரு ஆயுதமாக இந்த விவ­கா­ரத்தை மாற்­று­வ­தற்கு முயற்­சிக்­கிறார் மஹிந்த.

வேறு சில புறக்­கா­ர­ணிகள் இருந்­தாலும், தற்­போ­தைய அர­சாங்கம் கொடுத்­துள்ள வாக்­கு­று­திகள் தான் சர்­வ­தேச சமூகம், அதற்குப் பின்னால் நிற்­ப­தற்குக் காரணம். இலங்கை அர­சாங்கம் தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் என்று சர்­வ­தேசம் நம்­பு­கி­றது.

அந்த நம்­பிக்கை உடைக்­கப்­பட்டு விட்டால், சர்­வ­தேச சமூ­கத்­தினால், இந்த அர­சாங்­கத்­துக்கு இருந்து வரும் பாது­காப்பு கவசம் உடைந்து விடும் என்று மஹிந்த ராஜபக் ஷ கணக்குப் போடு­கிறார்.

ஏற்­க­னவே அர­சி­ய­ல­மைப்புத் திருத்த விவ­காரம் உள்­ளிட்ட விட­யங்­களை நிறை­வேற்ற விடாமல் தடுக்க முயன்று தோல்வியடைந்திருந்தார் மஹிந்த.

அவை மஹிந்­தவின்   தனிப்­பட்ட அர­சியல் நலன்­க­ளுடன் அதி­க­ளவில் பின்னிப் பிணைந்­தி­ருந்த விட­யங்­க­ளாக இருந்­ததால், அரசாங்கத்­துக்கு எதி­ராக அவரால் போதி­ய­ளவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அணி­தி­ரட்ட முடியவில்லை.

ஆனால் காணா­மற்­போனோர் செய­லகம் தொடர்­பான சட்­ட­மூலம், மற்றும் பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்கும் விட­யங்கள் என்­பன இலட்­சக்­க­ணக்­கான சிங்­கள மக்­களின் உணர்­வு­க­ளையும் தொடக்­கூ­டி­ய­வை­யாக இருக்­கின்­றன.

எனவே, அர­ச­த­ரப்பில் இருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை இதற்கு எதி­ராக அணி திரட்­டு­வதில், கூடுதல் வெற்றி தனக்குக் கிடைக்கும் என்று மஹிந்த ராஜபக் ஷ கருதக் கூடும்.

அர­ச­த­ரப்பில் இருக்கும் தனது முன்னாள் விசு­வா­சி­களை அசைத்துப் பார்க்க வேண்டும் என்றால், சிங்­கள மக்கள் மத்­தியில் ஒரு­வித உணர்வுப் பிர­வா­கத்தை ஏற்­ப­டுத்­தி­யாக வேண்டும் என்று அவர் கணக்குப் போட்­டி­ருக்­கிறார்.

அவர் இப்­போது நடத்­த­வுள்ள பாத­யாத்­திரை அதற்­கா­னது தான். இந்தப் பாத­யாத்­திரை சுமு­க­மாக நடை­பெ­றுமா – குழப்­பங்கள் விளை­விக்­கப்­ப­டுமா என்று தெரி­யாது.

கண்­டியை நோக்கி ஜே.ஆர். தொடங்­கிய பாத யாத்­திரை கூட கண்­டியைச் சென்­ற­டைய முன்­னரே, கம்­ப­ஹாவில் உள்ள, இம்­புல்­கொடவில் எஸ்.டி. பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான குழு­வி­னரால் இடை­வ­ழியில் குழப்­பப்­பட்­டது.

அது­போன்று குழப்­பங்கள் நடக்­கு­மே­யானால், மஹிந்த ராஜபக் ஷவுக்கு இன்னும் ஆத­ரவு அதி­க­ரிக்­கலாம். அவர் போடு­கின்ற கணக்கு இல­கு­வாக நிறை­வே­றலாம்.

ஏனென்றால், கூடுதல் பர­ப­ரப்­பையும் அதிக கொந்­த­ளிப்­பையும் அது சிங்­கள மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்தும்.

சிங்­கள மக்­களின் உணர்ச்­சிகள் தான் இப்­போது மஹிந்த ராஜபக் ஷ அணி­யி­ன­ருக்கு முக்­கி­ய­மான ஆயு­த­மாக மாறி­யி­ருக்­கி­றது. அதனைக் கிளறி விடு­வ­தற்­காக அவர்கள் எதையும் செய்யக் கூடும். எந்­த­ள­வுக்கும் செல்லக் கூடும்.

சிங்­கள மக்கள் மத்­தியில் எதிர்ப்­புகள் வலு­வாக எழுந்தால், அதன் பிர­தி­ப­லிப்பு, பாராளுமன்றத்தில் கூட எதிரொலிக்கும்.

அவ்வாறான ஒரு திட்டத்துடன் தான், காணாமற்போனோர் செயலகம் தொடர்பான சட்டமூலத்தைத் தோற்கடிக்க கங்கணம் கட்டியிருக்கிறார் மஹிந்த.

இது மட்டும் நடக்குமேயானால், சர்வதேச அரங்கில் அரசாங்கம் நெருக்கடியைச் சந்திப்பதுடன், பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசு என்ற முத்திரையும் குத்தப்படும்.

அது மாத்திரமன்றி, வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்ற பெயர் நிரந்தரமானதாகி, உள்நாட்டில் தமிழ் மக்களின் ஆதரவையும் அரசாங்கம் இழக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகும்.

எனவே, மஹிந்த ராஜபக் ஷவின் பாதயாத்திரை அவ்வளவு ஒன்றும் சுலபமாக கணிக்கக் கூடிய ஒன்றாக தென்படவில்லை.

இந்த விடயத்தை அரசாங்கம் சரியாக கையாளத் தவறினால், கடுமையான நெருக்கடிமிக்க சூழல் ஒன்றுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடலாம்.

-சத்ரியன்-

Share.
Leave A Reply