கம்போடியாவில் பெண்கள் திருமணத்திற்கு முன்பு, அவர்கள் விரும்பிய ஆண் மகனுடன் வசிக்கலாம். இதற்காக தந்தைகளே தனியாக குடிசைகள் கட்டிக் கொடுக்கும் வினோத பழக்கம் இருந்து வருகிறது.
கல்யாணத்திற்கு முன்பு உறவு என்பது சமூகத்தில் பெரும்பாலானவர்களால் தவறு என்று தான் கருதப்படுகிறது. ஆனால் கம்போடியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது.
இங்கு உறவு வைத்துக் கொண்ட பின்னர் தான், திருமணமே செய்கிறார்கள். அதுவும் 9 வயதிலேயே பெண்களுக்கு அந்த சுதந்திரத்தையும் கொடுத்து விடுகிறார்கள்.
குருயெங் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் கிராமத்தில் தான் இந்த வினோதப் பழக்கம் இருந்து வருகிறது. இங்கு பெண்கள் வயதுக்கு வந்தவுடன் அல்லது 9 வயதிலேயே தனியாக குடிசை போட்டு கொடுத்து விடுகிறார் அப்பெண்ணின் தந்தை.
அதன் பிறகு அந்தக் குடிசைக்குள் தனக்கு பிடித்த ஆணுடன் அந்தச் சிறுமி வசிக்கலாம்.
அவளது மனதுக்குப் பிடித்த ஒருவனைக் கண்டறிந்த பின்னர், அதுகுறித்து குடும்பத்திடம் தெரிவித்தால் அவனையே அப்பெண்ணுக்கு கட்டி வைத்து விடுகிறார்கள்.
இதுகுறித்து குடிசையில் வசித்து வரும் 17 வயது நாங் சான் கூறுகையில், இது எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரமாக கருதுகிறோம். இதில் தவறு ஏதும் இல்லை.
சுதந்திரமாக நாங்கள் எங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இது உதவுகிறது. மேலும் உண்மையான காதலனை கண்டறியவும் இது உதவுகிறது.
இந்தப் பாரம்பரிய பழக்கத்தால் எங்களது பெண்கள் யாருமே தவறான வழிக்குப் போக வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்தக் கிராமத்தில் விவாகரத் பாலியல் கொடுமை, வரதட்சணைக் கொடுமை என எதுவுமே கிடையாது.