ஜப்பான் நாட்டில் கனகவா மாகாணத்தில் உள்ள சகமிஹரா நகரில் முதியோர் இல்லமொன்றில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 19 பேர் பலியாகியுள்ளதோடு 26 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த இல்லம் மாற்றுத் திறனாளிகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பாக அதிகாலை 2.30 மணியளவில் குறித்து இல்லத்தின் நிர்வாகி, 20 வயதுமிக்க இளைஞரே தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளார்.
இதனையடுத்து அதிகாலை 3.00 மணியளவில் குறித்த இளைஞன் தானாகவே கனகவா மாகாண பொலிஸாரிடம் சரணடைந்தார்.
குறிந்த இளைஞன் அம்முதியோர் இல்லத்தின் முன்னாள் பணியாளர் என்று கூறப்படுகிறது. இரண்டாம் உலகப்போரிற்கு பின் ஜப்பானில் இடம்பெற்ற பாரிய கொலை சம்பவம் இதுயென்பது குறிப்பிடத்தக்கது.