சென்னை: குழந்தைக்கு இளைஞர் ஒருவர் மது கொடுப்பது போல சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் வரும் இளைஞர் ஒருவர் அங்குள்ள குழந்தைக்கு பீர் கொடுக்கிறார். மேலும், மது பாட்டில் ஒன்றும் குழந்தையின் அருகே வைக்கப்பட்டுள்ளது.
இதை மற்றொரு நபர் வீடியோ எடுக்கிறார். இந்த கொடூர செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.