நாளை உலகமெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிறது M.S. Dhoni The Untold Story. இப்படம் கிட்டத்தட்ட 4500 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தயாராகி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது வந்த தகவல் படி இப்படத்தை பாகிஸ்தான் நாட்டில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. ஏன் என்று விசாரிக்கையில், பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியா படங்களில் நடிக்க கூடாது, இந்தியாவிலும் இருக்க கூடாது என்று இந்தியா திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இதனையடுத்து பாகிஸ்தான் அரசு தங்கள் பங்குக்கு, இப்படத்தை பாகிஸ்தானில் வெளியிட தடை செய்துள்ளது. ஆகையால் பாகிஸ்தான் ரசிகர்கள் பல துறைகளில் சாதனை படைத்த டோனியின் வாழ்க்கை வரலாற்றை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.