தமிழக முதல்வர் மர்மமான முறையில் மரணமடைந்துவிட்டார் என அவதூறு செய்தி பரப்பிய தமிழச்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று பிரான்ஸை சேர்ந்த தமிழச்சி என்பவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் என அதிரடி பதிவை ஒன்றை வெளியிட்டார், இதனையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பேஸ்புக்கில் ‘தமிழச்சி’ என்ற பெயரில் முதல்வர் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பிய நபர் மீது அதிமுக ஐடி பிரிவு மாநில செயலாளர் ராமசந்திரன் சென்னை சைபர் கிரைம் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகரை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ள பொலிசார், பேஸ்புக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியது தொடர்பாக தமிழச்சி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து தமிழச்சி வெளியிட்டுள்ள பதிவில், சென்னை போலிஸ் என் மீது வழக்கு பதிவு. வரவேற்கிறேன். ப்ரெஞ்ச் போலிஸ் விசாரணைக்கு காத்திருப்பேன். உண்மைகள் வெளிவர எனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.