உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து கவிஞர் சினேகன் உருக்கமாக சில கருத்துக்களை கவிதை வரிகளில் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22ம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 13 நாட்கள் ஆகியும் அவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அவருக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் மற்றும் சிறுநீரக தொற்றின் பாதிப்புகள் இருந்ததால், அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார் என்று செய்திகள் வெளியானது.
முதல்வரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை சார்பில் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அதில் முதல்வர் உடல்நிலை தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், வழக்கமான சிகிச்சைகள் தொடருவதாகவும், டாக்டர்கள் குழுவால் முதல்வர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்நிலையில் கவிஞர் சினேகன், முதல்வர் ஜெயலலிதா குறித்து உருக்கமாக கவிதை வரிகளில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.