யாழ்ப்பாணத்தை வந்தடைந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கையமரனை பெரும் திரளான மக்கள் வரவேற்றனர்.
இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இன்று காலை கொழும்பை வந்தடைந்த தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிக்கொப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள்.
இவர்களை அதிகளவான ரசிகர்கள் வரவேற்ற நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தை சுற்றி பார்வையிட்டனர்.
இதனையடுத்து இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.நடராஜன் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோரை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.