வள்ளி அவள் பெயர் . சத்துணவு கூடத்தில் வேலை பார்ப்பவர். அவள் கணவர் பிச்சை. காய்கறிக்கடை வைத்திருப்பவர். காலை போனால் இரவு கடையை பூட்டி விட்டு விட்டு வீட்டிற்கு வர இரவு மணி பனிரெண்டு ஆகிவிடும்.
மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து கோயம்பேடு மார்க்கெட் ஓடிவிடுவார். இதனால் இவர்களுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். இவர்களுக்கு ஒரே ஒரு மகள்.எல்கேஜி படிக்கிறாள் ஜீவிதா என்று பெயர்.
இந்தக்குழந்தை மீது பிச்சைக்கு கொள்ளை பிரியம். இந்த நேரத்தில் தான் கூட வேலை பார்க்கும் தம்பு என்பவன் மேல் வள்ளிக்கு நட்பு உண்டானது. அந்த அன்பு கள்ளக் காதலாக மாறியது. தம்புவிற்கு வள்ளியை விட இரண்டு வயது குறைவு.
ஒருநாள் இருவரும் வள்ளியின் வீட்டில் வைத்தே உடலால் இணைந்தனர். இதுவரை அப்படி ஒரு சுகத்தைக் காணாத வள்ளி சொக்கி போனாள். தம்பு மேல் பைத்திய மாகி விட்டாள். ருசிகண்ட பூனையாக அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருக்க ஆரம்பித்தனர்.
திடீரென்று தம்புவிற்கு நிமோனியா ஜுரம் வர இருபது நாள் வள்ளியைப் பார்க்க வரவில்லை. வள்ளி துடித்துப் போனாள்.அவனைத் தேடி போனாள். அவனுக்கு மெல்ல ஜுரம் குணமாகி வந்தது.
அதன் பின் ஒரு வரம் கழித்து இருவரும் தனிமையில் இருக்க,தம்புவால் பழைய மாதிரி உற்சாகமாக அவளோடு சதோஷமாக இருக்க முடியவில்லை.வள்ளியால் தாங்கமுடியவில்லை.
அவன் தனக்கு செக்ஸ் ஆசை வர வில்லை என்று கூற , அப்போதுதான் சில தவறான பெண்கள் காதல் இன்பம் பெருக நரபலி கொடுக்க வேண்டும் அதுவும் முதல் பெண் குழந்தையை கொடுக்க வேண்டும் என்று கூறி கடப்பாவில் உள்ள ஒரு மந்திர வாதியின் விலாசமும் கொடுத்துள்ளனர்.
அந்த இரக்கமற்ற காமப்பேய் தனது பெற்ற மகளையே பலி கொடுக்க தயாரானாள். இதை கேட்ட தம்பு பயந்து விட்டான் அப்படி ஒரு சுகமே தேவை இல்லை.இது பாவம் என்று தடுக்க , வள்ளியோ கேட்க வில்லை.
அடுத்த அமாவாசை அன்று மகளை ஏமாற்றி கூட்டி போய் கடப்பாவில் உள்ள மந்திர வாதியிடம் ஒப்படைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து விட்டாள். கணவன் பிச்சை குழந்தையை தேட அவளும் பஸ்டாண்டில் தவறி விட்டாள் என்று நடித்து அழுதிருக்கிறாள்..!
கணவன் போலீசுக்கு தகவல் கொடுக்க முதல் கட்ட விசாரணையிலேயே வள்ளி மாட்டிக் கொண்டாள். இப்போது வள்ளி, தம்பு, கம்பி எண்ணுகின்றனர்..! மந்திர வாதி எஸ்கேப் .
காமவலையில் விழுந்த ஒரு குடும்பம் என்ன கதிக்கு ஆளாகிவிட்டது…!