மேலைத்தேய வெள்ளை இனத்தவர் நமது கலை கலாச்ச்சாரம் பண்பாடு என்பவற்றில் தீராத பற்றுக் கொண்டவர்கள்.
அதனால் அவர்கள் நமது கலாச்சாரத்தில் அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர் நமது உடை நடை பாவனை என எல்லாவற்றையும் தங்களது மனதில் பதித்து வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் நம்மீதும் நமது கலாச்ச்சாரத்தின் மீதும் பற்று வைக்கும் பொது வெளிநாடுகளில் நமது கலாச் சாரத்துக்கு உரித்தான நமது மக்கள் மிகவும் அலங்கோலமான மேலை நாட்டு காலச்சார வட்டத்துக்குள் சிக்கி தலை குனிய வைக்கிறார்கள்.
யாழ்ப்பாணம் , கைதடியில் இடம்பெற்ற திருமண விழா அனைவர் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.
நமது சகோதரியான ஒருவரை வெள்ளை இனத்தவர் திருமணம் செய்து நமது பரம்பரை திருமண ஊர்வலமான மாடுவண்டியில் ஊர்வலம் போகும் கண் கொள்ளாக் காட்சி.
திருமணத்தின் மகத்துவத்தினை உணரத் தவறும் இக் கால கட்டத்தில் தமிழர் மரபுப் படி மாட்டு வண்டியில் திருமணம் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன் அவர்களின் உறவுனர் நமது பாரம் பாரிய தமிழ் கலாச்சார உடையான சேலை வெட்டி என அணிந்து திருமண நிகழ்வில் கலந்து கொண்டது அனைத்துப் பொது மக்களும் வெளிவந்து வேடிக்கை பார்த்து தலை குனியும் நிகழ்வு.