“குடும்ப பிணக்கு காரணமாக புகையிரதத்தினுள் விழுந்து காயமடைந்திருந்த குடும்பஸ்த்தர் சிகிச்சை பலனின்றி நேற்று (11.10.2016) யாழ்ப்பாண வைத்தியசாலையில் மரணமடைந்தார்.
மதுப் பாவனைக்கு அடிமையாகியிருந்த குறித்த குடும்பஸ்த்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அங்கிருந்து தப்பிச் சென்று புகையிரதத்தினுள் பாய்ந்ததாக தெரிய வருகின்றது.
இவ்வாறு மரணமானவர் திருநெல்வேலி வளாக வீதியை சேர்ந்த நித்தியானந்தன் முகுந்தன் என்பவராவார்.