விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் படத்தைக் கொண்டுள்ள சுவரொட்டிகளை ஒட்டினார் என கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜேர்மனி பிரஜையான யாழ்ப்பாணப் பெண்ணை நாடு கடத்துமாறு கொழும்பிலுள்ள நீதிமன்றம் ஒன்று இன்று உத்தரவிட்டது.
மலர்விழி ஈஸ்வரன் என்ற குறிப்பிட்ட பெண் சுன்னாகம் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டபோது பிரபாகரனின் படங்களைத் தாங்கிய சுவரொட்டிகள், திறப்புக் கேர்வைகள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டன.
சுன்னாகம் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை பிரபாகரனின் படங்களைத் தாங்கிய சுவரரொட்டிகள் சில காணப்பட்டதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையின் போதே குறிப்பிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பகுதியில் இருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் பதிவுகளின் மூலம் குறிப்பிட்ட பெண் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று கைதான அவர், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் உடனடியாகவே கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டார். இன்று கொழும்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகலை குறிறஞ்சாட்டப்பட்ட மலர்விழியை உடனடியாக நாடு கடத்துமாறு உத்தரவிட்டார்.:06
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஜேர்மனியில் வசிக்கும் ”பிரபாகரனின் மருமகள் கைது!! : யாழில் பரபரப்பு
12-10-2016
“ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தேசிய அடையாளம் என்பன பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டியவர் என்ற சந்தேகத்தில் ஜேர்மன் நாட்டி வசிக்கும் தமிழ் பெண் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுவிலைச் சேர்ந்த மலர் விழி ஈஸ்வர ராசா என்ற பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜேர்மன் மன்ஸ்ரன் பகுதியில் வசிக்கும் இவர் இலங்கைக்கு 23.09.2016 அன்று வந்துள்ளார்.
பொலிலீஸ் விசாரணையில் பிரபாகரன் தன்னுடைய மாமா எனவும் தான் இறப்பதற்கு முன்னர் அவரைத் பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளாராம்.
ஜெர்மனியிலிருந்து வந்த திருமகளே….
பிரபாகரனின் மருமகளே…..
நீங்க…
கல்யாணம் கட்டி வெளிநாடு போவீங்களாம்…
கட்டினவனை கழட்டி விடுவீங்களாம்….
பிறகு அப்பிடி இப்பிடி திரிவீங்களாம்…
இப்ப இங்க வந்து
ஒட்டுறீங்களா நோட்டீஸ்….
காசு கண்ணை மறைக்க
நாட்டுப்பற்று, தேசப்பற்று வருகுதோ
உங்க விளையாட்டு எங்களுக்கு உசிர் போகுது….
ஆஞ்சனேயா…..
தலையின் படத்தை ஒட்டி CCTV கமராவில் பிடிபட்டு இருக்கிற நம்ம வெளிநாட்டு அன்ரியே “ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்” உண்மையாப் போச்சே….
புலம்பெயர்ந்த தமிழரை திருப்பி அனுப்ப வேண்டாம் என்டு விக்கி சொல்லீற்றார். போதுமா…