முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா இன்று சென்னை வர உள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவர் விரைவில் நலம்பெற வேண்டி அதிமுகவினர் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சரின் சிகிச்சை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக லண்டன் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மீண்டும் சென்னை வந்துள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து முதலமைச்சரின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து செல்கின்றனர். இதையொட்டி மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று சென்னை வருகிறார். அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லும் அவர், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளார்.