தனது மகன் மீது அவரது தந்தை தவறி விழுந்ததில் குறித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
5 வயதுடைய சிறுவன் ஒருவரே இந்த சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
விற்பனை நிலையமொன்றில் குறித்த சிறுவன் அவரது தந்தையின் பின்னால் விளையாட்டாக தொங்குவதற்கு முற்பட்டுள்ள போது தந்தை அவர் மீது விழுந்துள்ளார்.
இதன் போது குறித்த சிறுவனின் உடல் நசுங்குண்டு தலையில் அடிப்பட்டுள்ள நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் அந்த விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் இவ்வாறு பதிவாகியிருந்தது.