முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தொடர்பில் பல்வேறு வகையான கருத்துகள் தற்போது நாட்டில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஒருதரப்பினர் அவருக்கு ஆதரவாகவும் மற்றும் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர் மீது வழக்கு விசாரணைகளும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் சீன விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். சீனாவில் பல்வேறு சமய வழிபாட்டு தலங்களுக்கு அவர் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதோடு மகிழ்ச்சிகரமான சுற்றுலா பொழுதினையும் தன் மனைவியுடன் சீனாவில் கழித்து வருகின்றார்.
பெல்ஜியத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்ட புகைப்படங்கள் வைரலானதைப்போல், இவரின் சீன புகைப்படங்களும் தற்போது வைரலாகிக்கொண்டு வருகின்றது.