ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எச்சரிக்கையை அடுத்து சுயாதீன நிறுவனம் ஒன்றின் பிரதானி, வெளிநாடு ஒன்றில் நுழைவதற்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி ஆற்றிய உரை ஒன்றின் போது சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடு குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஜனாதிபதியின் உரையை சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது வரையில் ஐரோப்பிய நாடு ஒன்றில் அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கமைய தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக குறித்த உயர் அதிகாரியினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.