யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாயிபவன் சைவ உணவகத்துக்கு முன்னால் உட்கார்ந்திருந்த நடக்க முடியாத முதியவருக்கு நேர்ந்த அவலம் மிகக் கொடுமையானது.
குறித்த உணவகத்துக்கு முன் ஊனமுற்ற வயோதிபர் ஒருவர் இருப்பதனை கண்ட உணவக ஊழியர் அவர் மீது நீரை ஊற்றி அவரை அங்கிருந்து கலைத்துள்ளார்.
இந்தமாதிரியான பலகொடுமைகள் கண்ணுக்கு தெரியாமல் யாழில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன…
யாழ்பாணத்தார் பண்பாட்டில், கண்ணியத்தில, கல்வியில் அதிசிறந்தவர்கள் அல்லவா??
அதனால்தான் இப்படிப்பட்ட அதிபுத்தியுள்ள மனிதர்கள் யாழில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
முள்ளிவாய்காலில் நடந்த பேரவலம் போன்று யாழ் மண்ணில் நடக்கவில்லையே??