அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தனக்கு ஆதரவாக இந்திய பிரதமர் மோடியுள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அடுக்கிய சசிகலா புஷ்பா கூறியதாவது, என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு ஆதரவாக இருக்கிறது.
பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கின்றனர். பிரதமரின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் அராஜகமான போக்குடன் செயல்பட்டு, முதல்வரை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று யாரும் நினைத்தால் கட்டாயம் குரல் கொடுப்பேன்.
மேலும், எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது முதல்வர்தான். இந்த நேரத்தில் நான் தட்டிக் கேட்பதை தொண்டர்கள் விரும்புகின்றனர் என அதிரடியாக கூறியுள்ளார்.