இலங்கையின் சமகால அரசியலிலும், சர்வதேச ரீதியிலும் அண்மைய நாட்களாக பேசப்படும் ஒரு விடயமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம் காணப்படுகின்றது.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம் இன்றும் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக கூறும் இலங்கை அரசாங்கம் அதனை நிரூபிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையினையும் இது நாள் வரையில் மேற்கொள்ளவில்லை.
இதுவே, இன்று வரையிலும் பிரபாகரனின் மரணத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போதைய இலங்கை அரசியலில் பிரபாகரனின் மரணம் குறித்த பேச்சுகளும் வலுப்பெற்றுள்ளன.
இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிய நிலையில், உயிரிழந்ததாக கூறப்படும் பிரபாகரனின் சடலத்தையும் காண்பித்தது.
எனினும், அந்த சடலம் பிரபாகரனின் உடல் அல்லவென மறுத்து ஏகப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியுள்ளது.
அன்று முதல் இன்று வரையில் சர்ச்சைக்குரியதாக காணப்பட்ட குறித்த விடயம் தற்போது இலங்கை அரசியலில் பாரிய ஒரு பேசும் விடயமாக மாறிபோயுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முதல் அண்மையில் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி காமல் குணரட்னம் வரையிலும் பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக கூறிவருகின்றனர்.
எனினும், தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைமைகளும், சர்வதேசமும் பிரபாகரன் உயிரிழந்தமையை உறுதிப்படுத்தும் விதமாக மரணச் சான்றிதழை கோரியுள்ளனர்.
இதனை இலங்கை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்த போதிலும், கடந்த அரசாங்கமும் சரி, சமகால அரசாங்கமும் சரி அதற்கான எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.
பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக கூறும் இலங்கை அரசாங்கம் அதற்கான மரணச் சான்றிதழ் வழங்குவதில் காலத்தை கடத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றது.
அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது வரை வெளியிடாத இரசியத்தை வெளியிட வேண்டி வரும் என மஹிந்த ராஜபக்சவை எச்சரித்திருந்தார்.
அந்த இரகசியமும், எச்சரிக்கையும், எதற்காகவென்று இன்றளவிலும் ஒரு சரியான தெளிவை கொடுக்காத நிலையில், அண்மையில் பிரபாகரனின் மரணம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச ஒரு கருத்தினை முன்வைத்திருந்தார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் அப்போது தாம் இருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
அந்த கருத்தும் ஒரு வித சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச ஒரு சர்ச்சைக்குரிய கருத்தினை முன்வைத்துள்ளார்.
கடந்த ஆட்சியில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படவில்லை. எனினும், தற்போதைய நல்லாட்சியில் அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என கூறியுள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதால், பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை எளிதாக முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்சவின் இந்த கருத்தும், ஜனாதிபதி ஹம்பாந்தோட்டையில் வைத்து வெளியிட்ட கருத்தும், மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் அமைந்துள்ளது.
மேலும், குறித்த மூவரினது கருத்தினை கொண்டு பார்க்கும் போது ஏதோ ஒரு பாரிய விடயத்தினை மறைப்படுவது மட்டும் உறுதியாகின்றது. ஆனால் அந்த விடயம் என்னவென்பது மட்டுமே தற்போது ஆராய்ந்து பார்க்க வேண்டிய விடயமாக உள்ளது.
எவ்வாறாயிளும், இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களின் கருத்துக்களும், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை மட்டுமே உண்மை.