மும்பை: ‘பிக்பாஸ்’ (Bigg Boss) போட்டியில், பொம்மை குதிரை மேல் பயணம் செய்யும் போது, நடிகை, சிறுநீர் கழித்த சம்பவம், பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
‘கலர்ஸ்’ எனப்படும் வட மாநில, ‘டிவி’ சேனலில், ‘பிக்பாஸ்’ என்ற, மிகப் பிரபலமான தொடர் ஒளிபரப்பாகிறது.
அதன், 10வது பாகத்துக்கான படப்பிடிப்பு, சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் ஒரு பகுதியாக, பொம்மை குதிரையில், பயணம் செய்யும் போட்டி நடந்தது.
இதில், நடிகை பிரியங்கா ஜக்கா, 32, நடிகர் நவீன் மற்றும் சிலர் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் பங்கேற்போர், ‘எந்த காரணத்தாலும் மற்றவர் மீது கோபப்படக் கூடாது’ என்பது, விதி.
இதனால், வேண்டுமென்றே மற்றவரை கோபப்படுத்துவதற்காக, சக போட்டியாளர், குறும்புத்தனத்தில் ஈடுபடுவதும் வழக்கம்.
அப்படி கோபப்படும் நபர், போட்டியிலிருந்து நீக்கப்படுவார்.
இந்நிலையில், போட்டியில் தொடர்ந்து நீடிப்பதற்காக, பொம்மை குதிரை மீது அமர்ந்தபடியே, நடிகை பிரியங்கா, சிறுநீர் கழித்தார்.
இதன்பின், ஈரமான, ‘பேன்ட்’டை, சக நடிகரான நவீனிடம் கொடுத்து, துவைத்து தரும்படி கூறினார்.
கோபம் அடைந்த நவீன், பிரியங்காவை கடுமையாக திட்டினார்.
கோபப்பட்டதால், போட்டி விதியின்படி, நவீன் வெளியேற்றப்பட்டார். போட்டியில் வெற்றி பெறுவதற்காக, பேன்ட்டில் சிறுநீர் கழித்த நடிகையின் செயல், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.